10/15/2016

என் நெஞ்சில்

முட்டாமல் கிட்ட வந்து 
முத்தங்கள் நூறு தந்து 
நிற்காமல் போகும் தென்றலாய்
*****
என்னையும் பார்க்காமல் 
என் கண்ணையும் பார்க்காமல் 
மண்ணையே பார்க்கும் வெக்கமாய் 
******
சொன்னதும் கேக்காமல் 
கேட்டதும் சொல்லாமல் 
பெண்ணென நெளியும் ஓடையாய் 
*****
மெல்லவும் முடியாமல் 
தின்னவும் முடியாமல் 
காதல் நெஞ்சில் சிக்கலாய் 
****
தப்பவும் முடியாமல் 
தப்பிக்கவும் நினைக்காமல் 
கையைகட்டி நிக்கிறாய்


என் நெஞ்சில் 




No comments: