10/15/2016

துடிக்குதடி இதயம்

உன்னை அழகாக்கி 
என்னுடன் கூட்டிச்செல்ல
துடிக்குதடி இதயம்

என்னை சிவனாக்கி
உந்தன் நினைவாகி
உன்னுடன் அலையவே
துடிக்குதடி நெஞ்சம்

மண்ணில் நீவிழுந்தால்
கண்ணில் மண்விழுந்ததுபோல்
கலங்குதடி கன்னம்

கன்னம் இரண்டினிலே
செல்லக்கடி கடித்க
சினுங்கவேண்டும் 
கொஞ்சம்


அன்பை அள்ளித்தந்து
உன்னை அள்ளி அணைத்து
காதல் கொள்வதே எண்ணம்

No comments: