10/16/2016

புலம் பெயர்ந்தாலும் மனம் மாறாது
திறந்து கிடக்கும் யன்னல் வழியே
பறந்து கிடக்கும் வானம் கண்டேன்
மனதில் தோன்றும் எண்ணம் எல்லாம்
நினைந்து நினைத்து கண்ணீர் விட்டேன்

நாலுபக்கம் வேலி கட்டி
நடுவில் ஒரு வீடு கட்டி
படலைக்கு கூட பட்லொcக் போட்டு
பாதுகாப்பாய் இருந்த குடும்பம்

உயிரை பாதுகாக்க வேண்டுமென்று
நாலு திசையும் ஓடி ஒளிந்து
திக்குக்கு ஒருவராய் சிதறிவிட்டோம்
பெற்றவர்களை மட்டும் விட்டிவிட்டோம்

வயது வந்த நேரத்திலும்
வைரம் பாய்ந்த மனசுடனே
சொந்த வளவில் சோறு ஆக்கி
தின்று மகிழும் அம்மா அங்கே

ஐந்துவருசத்துக்கு ஒரு முறையேனும்
பேரப்பிள்ளைகளை கூட்டிக்கொண்டு
அம்மா அப்பாக்கு காட்டி விட்டு
வந்த கடனை அடைப்பதற்கு
திரும்பி ஓடி வந்துவிடுவோம்


சொந்த மண்ணில் போய் நின்று
சொந்தத பந்தங்களோடு விருந்துண்ட்டு
கோயில் குளம் போய்வந்து
சந்தோசமாய் இருந்ததை நினைத்தே 
இரவு பகல் உழைக்க தொடங்குவோம்
அடுத்த ஐந்துவருடம் வரும் வரைக்கும்

No comments: