1/28/2011

ஈழம் தமிழர் நாடு



ஈழம்
தமிழர் நாடு
உலகம்
அவர்கள் வீடு

1/24/2011

காதலியின் கவிதை

உந்தன் காதல் எந்தன் உள்ளே உரசி செல்லுதே
உரிமையோடு என்னை சுரண்டி இனிமை காணுதே
உந்தன் நெஞ்சில் தலை சாயந்து இருக்கும் நேரம்
எந்தனுள்ளே பட்டாம்பூச்சி பறந்து செல்லுதே

பக்கம் நின்று பேசும் பொது பரிதவிக்கிறேன்
தொட்டு விட்டு செல்லும் போது சிலிர்ப்படைகிறேன்
பார்வையாலே நூறு கோடி பரிசம் தருகிறாய்
பாவப்பட்ட உதட்டினிலே முத்தம் தருகிறாய்

வெட்கப்பட்டு நிற்கும்போது இறுக்கி அணைக்கிறாய்
இதழ்கலாலே எனைவருடி இணங்க வைக்கின்றாய்
மோகத்திலே சிக்கி கொண்டு முக்தி அடைகிறேன்
எனை சொர்கத்துக்கு கூட்டி செல்லும் கடவுளாகிறாய்

1/19/2011

காதலித்தே காதலித்தே கொல்லப்போகிறேன்


கோவப்பட ரோஜா முகம் சிவந்து போனதோ
கஷ்டப்பட்டு கோவப்பட்டால் உதடு சிரிக்குதோ
முகத்தை திருப்பி முறைத்து பாத்தால் கோவமாகுமோ
முத்தம் ஒன்று தந்துவிட்டால் கோவம் போகுமோ

நித்தம் உன்னை காதலிக்கவே கனவு காண்கிறேன்
நிம்மதியை தரத்தானே சேவை செய்கிறேன்
அன்புகொண்ட நெஞ்சில் கோபம் ஏன் முளைத்தது
ஆரதழுவ வேண்டும் எண்டு மனசு சொல்லுது

உன்னை மட்டும் நினைப்பதற்கே ஜீவன் கேட்கிறேன்
உண்மை உள்ள காதல் நெஞ்சை அள்ளித்தருகிறேன்
அன்பில் வர்ந்த காதலையே சொல்லத் துடிக்கிறேன்
உன்னை காதலித்தே காதலித்தே கொல்லப்போகிறேன்

1/17/2011

எனை ஏங்க வைக்கும் ஊடலென்ன


வயலோர வரப்பினிலே
சிலையாக நடந்தவளே
அலையாக காற்று வர
உன் அசைவாலே பாட்டுவர
நான் புயலான மாயமென்ன
புடம்போட்ட தேகமென்ன

ஏர் பிடித்த மாடுகளோ
சீர்படுத்தி நிலம்பிளக்க
தேனான மழைத்துளிகள்
உடல் முழுக்க பரவிவிழ
கோடான விளைச்சலுக்கு
ஏங்கிநிற்க்கும் ஏழை என்ன

கந்தாங்கி சேலை கட்டி
கை நிறைய வளையளிட்டு
பெண் தாங்கும் இடையாலே
பந்தாடி செல்கையிலே
உரம் போடா வயலினிலே
நெல் தானாக முளைத்தென்ன

1/14/2011

நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)

உவன் தம்பி சுதாக்கு வேலையில்ல சிவனே எண்டு இருந்த என்ன மாட்டிவிட்டிடான்

தம்பி சுதா வின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த கட்டுரை. இதுதான் கடைசி. எனது பிளாக்கரில் இனி கவிதை மட்டுமே வெளியிடப்படும். இது சத்தியம். (ஏனெண்ட அது தான் இலகு பந்தி பந்தியா அடிக்க தேவையில்லை ).

வன்னியில் இருந்து ஒரு கடிதம் வந்தது பிளாக்கர் ஆரம்பிகச்சொல்லி.

2008 மார்கழி மாதம் இந்தியா சென்றபோது பிளாக்கர் சமந்தமாக கனடாவில் இருந்தது வந்த அண்ணா coumputer தெரிஞ்ச மச்சானோட கதைத்தார். அப்பொழுது ஒன்றும் புரியவில்லை. நான் சும்மா பக்கத்தில கேட்டு கேட்டு கொண்டு தலையை ஆட்டி ஆட்டி கொண்டு இருந்தான். பெரிய பெரிய ஆக்கள் எல்லாம் பிளாக்கர் வைத்திருக்கிறார்கள் கவிதை போடுகிறார்கள் என்றார். அப்பவே மனதுக்குள்ள முடிவெடுத்திட்டன் நானும் ஒரு பிளாக்கர் திறக்குரதான் என்று .சிறுவயதில் இருந்து கொப்பியில் எழுதிவைத்த கவிதைகளை போடலாம் ஆனால் பெரியாட்களுக்கு முன் எனது கவிதை எடுபட வேண்டுமென்றால் பெயரிலாவது பெரியாள் போல் காட்டவேண்டும் என சிந்தித்தேன். சிந்த்திதுகொண்டே இலங்கை வந்தேன். அதனால் தான் கவி கிழவன் என பெயர் வைத்தேன்

இலங்கைக்கு வந்து அடுத்த நாள் அலுவலகம் சென்றேன். மேசையில் ஒரு கடிதம். இதோ கடிதம் . ஒரு சில காரணங்களுக்காக பெயர்கள் மறைக்கபட்டுள்ளது .

வன்னி வள்ளிபுனத்தில் இருந்து ஒரு கடிதம் வந்தது பிளாக்கர் ஆரம்பிகச்சொல்லி.கொஞ்சம் அதிகம் தான் அப்படியே தருகின்றேன் .




ஆச்சரியம் கணணி பாவனை குறைந்த வன்னியில் இருந்து இந்த இடம்பெயர்வுக்குளும் பிளாக்கர் சமந்தமாக Colombo இல் இருக்கும் எனக்கு எழுதுகிறார். ஆரம்பிதேன் 16 17 வயதில் இருந்து யாருக்கும் காட்டாது எழுதிவைத்த கவிதைகளும் பல்கலைகழக சுவர்களில் எழுதிய கவிதைகளும் புதிதாக எழுதுகின்ற கவிதைகளும் என கவிதைகளை பிரசுரிதேன்.

பாமினியில் மட்டும் type பண்ண தெரியும் அந்த துணிவில பிளாக்கர் ஆரம்பித்தான். நானே ஒன்று திறந்தேன் அது சரி வரல பிறகு மச்சானின்ட உதவியோட அவன கேட்டு கேட்டு துறந்தான். அவன் எங்கள் வீட்டில் இருந்து படிச்சபடியா வசதியா போட்டு. டெம்ப்ளேட் வடிவமைப்பு எல்லாம் சொல்லித்தந்தான்.எல்லா கவிதையையும் word ல அட்டிச்சன். நல்ல காலம் மச்சான் சொன்னான் unicod font தான் பிளாக்கர்ல போடலாம் என்று. அத எப்படி மாத்திரதென்ட்டு சொல்லித்தந்தான். ஒரு மாதத்திற்கு 10 கவிதை போடிரதுதான் அரம்பத்தில திட்டம் . அடுத்தடுத்து 10 கவிதையையும் போட்டன் . அப்படி 2 மாசம் போட்டன். thamilish ல இணைக்கவில்லை . இன்னும் என்ட கவிதைகள் சில தமிளிஸ்ல வராம இருக்கு . மச்சான் தான் எனக்கு thamilish இல இணைகிற முறை சொல்லித்தந்தான் . அவன் தான் vote போடுற கருத்து போடுற நுட்பங்கள் சொல்லித்தந்தான். எதாவது சந்தேகம் என்றால் உடனே தொடர்பு கொள்வது அவனைத்தான் . அவன் வேறு யாருமல்ல http://www.tamilhackx.com/ பிளாக்கர் உரிமையாளர் சயந்தன்.

என்ன பகிடி ஏன்டா விசிட்டர்ஸ் flag counter பொட்டுடன எங்க எங்க இருந்தெல்லாம் அகல் பக்கிரினம் எண்டு விழுந்திச்சு . எனகேண்டா சந்தேகம் அரம்பத்தில . என்ட கவிதையை இவ எல்லாம் பாபினமோ உது சும்மா பொய் சொல்லுது என்டு நினைச்சன் . பிறகு தான் கம்ப்யூட்டர் பொய் சொல்லாது எண்டு விளங்கிச்சு .

எனது கவிதைகளை பார்க்க உயிருடன் வருவாரா வந்தாலும் முகாமில் இருந்து எப்ப வந்து எப்ப பார்பார் என்ற ஏக்கம் மனதுக்குள் இருந்துகொண்டே இருந்தது .

வந்தார் குடும்பத்துடன் ஒருவித பிரச்சனையும் இன்றி. முகாமில் இருந்தார் தொடர்பு கொண்டார். இப்பொழுது முகாமில் இருந்து வெளியில் வந்து எனது 100 வது படைப்புக்கு ஆசியும் எழுதி தந்தார் . அவர் வேறு யாருமில்லை பூங்கோதை படைப்புகள் http://www.poonka.blogspot.com/ பளோகரின் சொந்தகாரி .இப்பொழுது லண்டன் சென்றுவிட்டார் . அவரது ஆசி கவிதையை பார்க்க

http://kavikilavan.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%A4%E0%AF%௮௮

இந்த லிங்குக்கு செல்லவும். ஒரு மாதிரி 161 கவிதை எழுதிட்டன். நிலா மதி அக்கா தான் முதன் முதலில் தனிபட்ட முறையில் தொடர்பு கொண்டவர். வாழ்த்தினவர். அவரையே இதை தொடர அழைக்கிறேன் .
நிலா மதி அக்கா நிலா மதி அக்கா எங்கிருந்தாலும் உடனே கரியாலியதுக்கு வரவும் உங்களுக்கு பொங்கல் காத்திருக்கிறது . இப்படிக்கு ஆலய பரிபாலன சபையினர்

1/10/2011

பெண்ணுக்கு தேவை எப்பொழுதும் ஊடல்

இருதயம் என்பது இடைவிடாத் துடிப்பு
இதழ்களின் ஓரம் உதிர்ந்திடும் சிரிப்பு
கண்ணினை இமை காத்திடும் பொறுப்பு
காதலில் விழுந்தோர் வாழ்வினில் நெருப்பு

பார்க்கத்துடிக்கும் எண்ணத்தின் வேகம்
பார்த்த உடனே கன்னத்தில் ஈரம்
பேசநினைத்த உதடுகள் போட்டி
வார்த்தை இல்லாமல் நடந்திடும் சூழ்ச்சி

கைகள் இரண்டிலும் விரல்களின் ஆட்சி
வெட்கம் என்பது காதலின் சாட்சி
தூர நிற்பது பெண்மைக்கு அழகு
துரத்தி செல்வது ஆண்களின் இலக்கு

சொல்லவருவதை மெல்வது காதல்
சொல்லாததை செய்வது கூடல்
பெண்ணுக்கு தேவை எப்பொழுதும் ஊடல்
ஆண்களின் வெற்றி டலில் ஆள்தல்

1/05/2011

கிராமத்து காதல்



கிராமத்து வீதியிலே
வெறுங்காலுடன் நடக்கையிலே
வேலிக்குள் சத்தம் கேட்கும்
எட்டிப்பார்த்தால் வெட்கப்படும்

சீத்தை துணி உடுத்திரிப்பாள்
சிங்காரமாய்த்தான் அவளிருப்பாள்
இரட்டைப் பிடி கட்டினாலும்
ஒற்றை மனதுடன் காத்திருப்பாள்

முற்றம் கூட்டும் சாக்கினிலே
முத்தம் கேட்டு வந்திடுவாள்
கன்னம் சிவக்க முத்தமிட்டாள்
கண்களாலே காதல் தருவாள்

தண்ணி அள்ள போகையிலே
தனியாக கூப்பிடுவாள்
தாகம் தீர்க்க தண்ணி தந்து
காதல் தாகம் தீர்த்திடுவாள்

கோவிலுக்கு போகையிலே
கொலுசு ஒலி பாதையாகும்
அவள் வாழ நான் தொழுவேன்
அவள் கண்களுக்கு கீழ் தவமிருப்பேன்