8/31/2015

நதி ஒன்று சேலைக்குள்

நதி ஒன்று 
சேலைக்குள் 
நெளிகிறது வளைகிறது 
என் இதயமும் இரு விழிகளும்
தென்றல் உரசிடும் 
தேகத்தை மறைத்திடும் 
சேலைக்குள் 
வெட்கத்தின் குவியலாய் 
என் காதல்
பறக்கின்ற தாவணியில் 
சிலிர்க்கின்ற தேகத்தில் 
ரகசியம்தேடும் காற்றுடன் 
நானும் சேர
வளைகின்றது நதியாய் 
சேலை தேகத்தில்
நெளிகின்றது இடை 
இடைவிடா போரட்டத்தில்
நடைமட்டும் காட்டி 
கொடுத்துவிட்டது - என் 
காதலை

8/28/2015

சந்தோசத்தில் பயணிக்கிறேன்

மேனியை தொட்டும் தொடாமலும் 
பட்டுச்செல்லும் இதமான 
இனிய காலைப்பொழுதில்தான்
என் தேவதைக்கான நேரம் 
குறிக்கபட்டிருந்தது

என்ன சந்தோசம் 
குயில்களும் குட்டி குருவிகளும் 
மலர்களும் வஞ்சனை இல்லாமல் 
முகத்தை மலர்ந்தே வைத்திருந்தன 
பேருந்து தரிப்பிடத்தில் 
தனியாகத்தான் காத்திருந்தேன் 
அனாலும் நான் 
தடக்கி விழுந்துவிட்டேன்

சில்லென்ற மெல்லிய காற்று 
முகவுரை வாசிக்கும்போதும் 
நான் கேட்க்கவில்லை 
பரவாயில்லை என் நெஞ்சுக்குள் 
நீ முழு உரையையும் வாசித்துவிட்டாய் 
இதுவரை என் மனதினில் 
தோன்றாத வரிகளை தோன்றவைத்தாய்

நீ அழகிதான் இருந்தாலும் 
மலர்களும் முழு நிலவும் உன்னுடன் 
போட்டி போட்டு நிக்கின்றன 
இருந்தும் உன் சிரிப்பால் 
அனைத்தையும் கொள்ளையடித்துவிடுகிறாய் 
அது போதும் எனக்கு 
நான் ஆனந்தப்பட 
இருந்தாலும் திமிர்பிடித்த 
உன் கூந்தல்கள் 
அங்கும் இங்கும் ஆடும்போது 
எனக்கு நெஞ்சுக்குள் பயம்தானடி 

பேரூந்தும் வந்துவிட்டது 
இன்றும் நான் மௌனித்த நினைவுடனே 
ஆனாலும் போராடாமல் 
உன் பார்வை ஒன்று கிடைத்த 
சந்தோசத்தில் பயணிக்கிறேன்

8/26/2015

தவிக்காமல் தவிக்கின்றேன்

விழுந்து தெறிக்கும் மழைத்துளியில் 
எழும்பி குதிக்கும் நீர்த்துளியாய் - உனை 
நினைத்து துடிக்கும் என் இதயம் 

குடை கொண்டுவந்து 
காகித படகொன்றுவிடும் 
குட்டி குழந்தையைப்போல் என் காதல் 

இலைகள் வருடி இதமாய் ஒழுகி 
மலர்களில் முட்டும்மழைத்துளியாய் 
என் உள்ளம் 

சிறு எறும்பு ஒன்று ஊர்ந்து 
காய்ந்த நிலமொன்றை தேடும் 
நீண்ட பயணம் போல் 
என் பார்வை 

நீ நனைந்திட்ட மலராய் 
தலை குனிந்திட்டபடியே 
மின்னுகின்றாய் கண்களாலே 

இடி இடிக்காத குறையாய் 
இதயத்தில் வெடிக்க 
தலை துவட்டாமல் திரிகிறாய் 
மழை நாளில் 

நிலை கம்பிகள் தடுக்க 
யன்னலின் பின்னால 
உனை ரசிக்கின்றேன் தேவி


தேவி ஸ்ரீ தேவி 
உந்திருவாய் மலர்ந்தொரு 
வார்த்தை சொல்லிவிடமா 
ஒலிக்காமல் ஒலிக்கின்றது 
மனதில் 

நான் தவிக்காமல் தவிக்கின்றேன் 
தனி அறையில்

வரவுக்காய் காத்திருக்கும் காதலி

மணமோடு குணம்தரும் 
சமையலறையில் – உனை 
விருந்தோம்பி சுவைகான 
தேடுகின்றேன் 

மலரோடு மணம்தரும் 
சாமியறையில் – உனை 
மணவாளக்கோலத்தில் 
தேடுகின்றேன் 

உடலோடு நீர்தழுவும் 
குளியலறையில் – எனை 
உடையோடு நீபார்க்க 
வேண்டுகின்றேன் 

உடைமாற்றி துயில்கொள்ளும் 
துயிலறையில் – எனை 
தூங்காமல் தாங்கிநிக்கும் 
தாயக தேடுகின்றேன் 

வந்தோரை வரவேற்க்கும் 
வருகை அறையில் – உன்
வரவுக்காய் காத்திருக்கும் 
கதிரையாகிறேன்

8/24/2015

இப்படிக்கு இதயம்

உயிராக காத்திருக்கும் 
காதலுக்காய் 
உயிர்விட காத்திருக்கிறேன் 

இப்படிக்கு இதயம் 
எழுதிக்கொள்வது ஏமாற்றத்துக்கு

8/21/2015

காதலுடன்



நீண்ட இரவுகளில்
எண்ணி முடிக்காத நட்சத்திரங்கள் போல் 
என் நினைவுகளும்

ஒற்றை நிலவுதான் அழகு
அதில் பட்ட கனவுகள் நூறு

வெட்ட வெளிதான் வானம்- அதில் 
சிறகடித்து பறக்கும் காதல்

காற்று வீசுது தென்றலாய் -என் 
சிறகுகள்மட்டும் அடிக்குது புயலாய்

சின்னஞ்சிறு இதயம்தான் எனக்கும் - அதில் 
உன்னைத்தவிர வேறென்ன இருக்கும்

எண்ணிமுடிக்காத நச்சதிரங்களிடையே - நான் 
எரிகல்லாய் சாம்பலகின்றேன் 
காதலுடன்

8/19/2015

நான் தாயாக தயாராய் இருக்கிறேன்

கண்மூடிய இரவுகளில் 
உன் கைஅரவணைப்பில் 
நான் தூங்க
மூசுகாற்று முட்டித்தெறிக்க 
முழு உடலும் உனை தழுவ
நெஞ்சினிலே வீணி வடிந்தோட
திடுக்கிட்டு நான் எழும்பும் நேரத்திலும்
இரவிரவாய் வாய் புசத்தும் நேரத்திலும்
தலையை தடவி தூங்கவைக்கும் 
உனை நம்பி 
நான் தாயாக தயாராய் இருக்கிறேன்

8/17/2015

முதமில்லாமல் மிச்சமில்லை

தென்றல் இல்லாமல் 
தீண்டல் இல்லை 
தீண்ட தெரியாமல் 
காதல் இல்லை
கண்கள் இல்லாமல் 
பார்வை இல்லை 
பார்க்கதெரியாமல் 
பாவை இல்லை
பெண்மை இல்லாமல் 
மோகமில்லை 
மோததெரியாமல் 
காமம் இல்லை
கொஞ்ச தெரியாமல் 
முத்தம் இல்லை 
முதமில்லாமல் 
மிச்சமில்லை
ஹா ஹா ஹா

8/14/2015

கலைந்தது காதல்

பிறக்கமுன் இறக்கும்
குழந்தையை போல 
நினைக்கமுன்பே கலைந்தது
காதல்

கண்ணை மூடுகிறேன் காதல்கொள்ளு

நெஞ்சம் முழுக்க உன்னை நினைத்து 
பஞ்சு மெத்தையில் படுத்தாலும் 
கண்கள் மூட மறுக்கிறது
கனவு என்னை கலைக்கிறது
செங்கமல இதழ்விரித்து
சொல்லுகின்ற வார்த்தை ஒன்றை 
கண்கள் தேடி அலைகிறது – இது 
காதல் என்று புரிகிறது
பிஞ்சு விரல்கள் பட்டதுமே 
அஞ்சி சுருங்கும் இடை எனது 
உன் பத்து விரல் படுவதற்காய் 
பாய்விரித்து கிடக்கிறது
கொஞ்ச நேரம் என்னைப்பார்த்து
கொஞ்சி குலாவ நேரம் ஒதுக்கு 
உந்தன் இதய கோவில் வாழும் 
தெய்வமன்றோ நான் உனக்கு
சிவனும் சக்தியும் இமையமலையில் 
அர்த்தனா தீஸ்வரராய் உந்தன் மடியில் 
கற்ற வித்தை மொத்தம் இறக்கு 
கண்ணை மூடுகிறேன் காதல்கொள்ளு

8/12/2015

என் காதலுக்காக

சில்லறை தெளித்தது போல்
மெல்லிய மழைத்துளி
பேரூந்தின் யன்னனில்
பட்டுத்தெறிக்க

அவசரத்தில் ஏறி
உனக்கென்றொரு இடம்பிடித்திருந்து
கண்ணுக்கு மை பூசுகின்றாய்
தோகை மயிலாய்
விரிகின்ற உன் கூந்தல்
என் முகத்தில் படுவது தெரியாமல்

அழகாக்குகின்றாய் உன்னை
பேரூந்தில் பின்னால் வருவது
நான் என்று தெரியாமல்

சொல்லிவிடு உலக அழகு
அத்தனையும் கொட்டிவிடுகிறேன்
உன் காலடியில்
என் காதலுக்காக

8/10/2015

இன்னும் நான் உன் நினைப்பினிலே

பனிவிழும் இரவினில்
தனி ஒரு கதிரையில் 
கறுத்த கோப்பி கோப்பையில்
என் நெஞ்சம் முழுக்க
உன் நினைப்பினிலே
களைத்து விழுந்து வீடு வந்து
உடைகள் களைந்து
குளித்து எழுந்து
தலையை துவட்டும் போதும் - நான்
உன் நினைப்பினிலே
பகல் முழுக்க வேலை செய்து
இடைவேளையில் உணவு உண்டு
கை விரலை கழுவும் போதும்
உன் கைபிடித்து இன்னும்
என் நினைப்பினிலே
சின்ன சின்ன சிரிப்பொலிகள்
நெஞ்சினிலே கிச்சு கிச்சு மூட்ட
சோம்பல் முறிந்து விழுந்த என்னை
தூக்கிவிட்டு வணக்கம் சொன்னது
இன்னும் என் நினைப்பினிலே
நினைக்கின்ற நேரமெல்லாம்
சிரிக்கின்றாய் நெஞ்சினிலே
சிரிக்கின்ற நேரமெல்லாம்
நினைக்கின்றேன் நெஞ்சினிலே
இன்னும் நான் உன் நினைப்பினிலே

8/07/2015

காதல்

காதல் 

தெரியாத இருவர் 
புரியாமலும் 
புரிந்தும் 
பிரியாமல் 
இருப்பது

8/05/2015

உறவு

இறைவனால் உருவாக்கப்பட்ட 
இயந்திரம் 
இரவு பகலாய் உழைக்கும் 
மனித இனம் 
அன்பு பாசம் எல்லாம் 
இரண்டாம் இடம் 
காசு ஒன்றே கடவுளைவிட 
முதல் இடம் 
இறுதியாக போவது 
மேல் இடம் – அப்பொழுது
தேடுவோம் அன்பை 
உறவுகளிடம்

8/03/2015

முத்தம்


அச்சடித்தது போல்
அடுக்கி வைத்த
பல் வரிசை

அழகாக சிரிக்கையில்

மனசெல்லாம்
இச்சை இச்சை

வெட்கபட்டு

நிக்கையில் நீ
செல்ல குழந்தை

கட்டிவைத்து தருவேன்

முத்தம்
பச்சை பச்சை