10/15/2016

காப்பாற்ற வாராயோ


மழையிலும் நனையவில்லை
வெய்யிலில் உருகவும் இல்லை
குடை கூட தேவையில்லை
என்றிருந்தேன் ....

கரும்பாறையைவிட
உறுதியாய் கிடந்தேன்

கரும்பைவிட
இனிமையாந் இருந்தேன்

உன்னை கண்டதும்
நடுங்கி வியர்து
நனைந்துவிட்டேன்

என் இதயத்ததை
பிடுங்கி முழுதாய்
முழுங்கிவிட்டாய்

ஆடைகளைந்தது போல்
என் இதயம் பறித்துவிட்டாய்
வெட்கங்கள் கொள்கிறதே
என்னை இறுக்கி அணைத்து
காப்பாற்ற வாராயோ .....



No comments: