11/27/2011

பிணமாய் வீழ்ந்தோம் மண்ணை காக்க



இதயம் விதைத்தோம் ஈழம் பிறக்க
கனவை வளர்த்தோம் காலம் முழுக்க
புயலாய் எழுந்தோம் புருவம் உயர்த்த
புழுதியில் விழுந்தோம் துரோகம் ஜெகிக்க

மூச்சை இழந்தோம் முதுகில் குத்த
பேச்சை இழந்தோம் சிறையில் அடைக்க
சாக துடித்தோம் மண்ணை அணைக்க
சாபம் பெற்றோம் தமிழ் மண்ணை இழக்க

வேள்வி செய்த்தோம் வெற்றி எடுக்க
வெட்ட வீழ்ந்தோம் காட்டி கொடுக்க
நம்பி இருந்தோம் உதவி கிடைக்க
நாயாய்  அலைந்தோம் அவர் கையை விரிக்க

இனமாய் அழிந்தோம் மானம் காக்க
பிணமாய் வீழ்ந்தோம் மண்ணை மீட்க
நினைவாய் சுமக்கிறோம் ஈழம் வெல்ல
எழுந்து நிப்போம் வெற்றி பிறக்க

11/17/2011

சேர்ந்திட துடிப்பது காதல் இதயம்


உயிருக்குள் உயிரான உறவே - என்
உறவுக்குள் தாயான அமுதே
நிலவுக்குள் ஒளியான அழகே - நீ
நினைக்கின்ற காதல் இனிதே

பிறக்கின்ற போது நீ குழந்தை - காதல்
பிறந்திட்ட போது நீ குமரி
கலக்கின்ற போது என் மனைவி
கடைசிவரை நீயே என் துணைவி

தொடங்கிட்ட போது காதல் இளமை
தொடர்கின்ற போது காதல் இனிமை
புரிகின்ற போது காதல் வாழ்க்கை
புன்னகையே நீ காதல் சேர்க்கை

அருகினில் இருப்பது என்றும் அன்பு
அடிக்கடி நினைப்பது இரண்டும் மனசு
சேர்ந்திட துடிப்பது காதல் இதயம் - கை
கோர்த்திட வேண்டும் என் தெய்வம்

11/13/2011

இலட்சியம் என்பது வேசங்கள்



இலக்குடைந்த
பயணங்கள்
பாதை தோறும்
பள்ளங்கள்
இடர் நிறைந்த
வாழக்கையில்
இலட்சியம் என்பது
வேசங்கள்

பசி நிறைந்த
மேனியில்
உயிர் பிழைக்கும்
மூச்சுக்கள்
உடல் களைத்து
உழைத்தாலும்
சொற்பமாக வரும்
காசுகள்

உடல் விரும்பி
உளம் விரும்பி
துணை விரும்பி
குழந்தைகள் - அவர்
மனம்விரும்பி
நடப்பதற்கு
மரணத்தை தொடும்
வேலைகள்

உலகை படைத்தான்
உயிரை படைத்தான் - ஏன்
வறுமை படைத்தான்
இறைவன் - அந்த
விடையை தேடி
ஓடி ஓடி
உயிரை மாய்க்கும்
ஏழைகள்

11/06/2011

வெட்கம் இன்றி வெளிநாடு வந்து



நீல வானில் வெள்ளை மேகம்
நீந்தி திரியும் பஞ்சுக்கூட்டம்
திரத்தி சென்று சேரும் நேரம் - நான்
காதல் கொண்ட கதையை சொல்லும்

உயர மரத்தில் ஒற்றைக்குருவி
ஊரூ முழுக்க பாட்டு சொல்லி
சிறகடிக்கும் காலைப்பொழுதில் - என்
மனசு முழுக்க உவகைகொள்ளும்

கூதல் காற்றில் உடல் விறைத்துப்போக
இரட்டைப்போர்வையை இழுத்து மூட
வெட்க்கப்படும் நினவுத்தோட்டம்
வேர்த்துக்கொட்டும் இருமனசுக் கூட்டம்

காலைப்பொழுதில் கடைக்கு சென்று
பாலும் வெதுப்பியும் வாங்கிவந்து
சூடாய் கோப்பி குடிக்கும் போது - அவள்
ஸ்பரிசம் என்று நா உணர்ந்துகொள்ளும்

சொந்தம் விட்டு வெளிநாடு வந்து
இரவை மறந்து உடல் உழைக்கும் போது
பட்ட துன்பம் மாறிப்போகும்
தொலை பேசி ஓசை கேட்க்கும்போதே