4/30/2015

நீ ஏங்கிடும் வேளை

விடியும்வரை 
கவிதை எழுதவா
நீ தூங்கிடும் அழகை
விடிந்ததும் தூங்கிடவா
நீ ஏங்கிடும் வேளை

4/29/2015

காதலெனும் அத்தியாயம்



பேருந்துக்கு காத்து நிற்பதும்
பொறுமை இன்றி தலை கோதுவதும்
பெரும் காற்று அதை கலைப்பதும்
நான் அதை பார்ப்பதும்
நீ எனை முறைப்பதும்

காதலெனும் அத்தியாயம்
எழுதப்போகும் தொடக்கமோ

4/27/2015

காதல் துளிர்க்குது

நெஞ்சுக்குள்ளே இதயம் கிடந்தது 
தானாய் துடிக்குது 
இதயத்துக்குள்ளே காதல் வந்து 
தேனாய் வடிக்குது
வடியும் தேனை குடிக்க இங்கு 
பூக்கள் பூக்குது
பூக்கும் மலர்களை வண்டு முட்டி 
மயங்கி கிடக்குது 
மயங்கி கிடக்கும் வண்டின் மீது 
மீசை முளைக்குது 
மீசை முளைத்த ஆசையினாலே 
காதல் துளிர்க்குது

4/24/2015

உணர்வு ஒன்று தோன்றி

உணர்வு ஒன்று தோன்றி 
வரிகள் ஒன்றை தேடி 
கவிதையாக மாறி
உன் காலில் கிடக்குதடி தேவி

4/21/2015

காத்திருக்கும் விடியலுக்காய்




என் காதல் இரவு

மலர்கள் பூத்து

காத்து கிடக்கும்

மாலை நேரத்தில்


வண்டுகள் தேன்முட்டி

மயங்கி கிடக்கும்

அந்தி நேரத்தில்


உன் கை பிடித்து

கூட்டிசெல்வேன்

பூங்காவுக்கு


கல்லில் செய்த கதிரையில்

கைகள் இரண்டும்பற்ற

கதைகள் பேசுவேன் - உன்

கண்களையே நான் பார்ப்பேன்


சின்ன சின்ன சினுங்களும்

குட்டி குட்டி கோவமும்

மெல்ல தோளில் சாய்தலும்

எல்லாம் சேர்ந்து ஒரு காதலாய்


விட்டு கொடுக்கா பேச்சுக்களும்

கிட்ட வந்து முட்டி நிப்பதும்

சொட்ட சொட்ட

தேன் ஊரும் சொண்டுகளும்

சூரியனையயே கண்ணடித்து

மறைத்துவிடும் கடலுக்குள்


மெல்ல காலால் கோலமும்

மெல் கூந்தல்

கையில் சிக்குவதும்

தீண்ட ஏங்கி

எல்லை தாண்டா நிப்பதும்

வேண்டுமென்றே

தோள் முட்டி கதைப்பதும்

வேதம் சொல்லும் காதலாக


மாலை மறைந்து

கண்கள் இருட்ட

மனமே இல்லாமல்

கால்கள் எழும்ப

வீடு செல்லும் வேளையில் - என்னை

விட்டு சென்றாய் சாலையில்


அந்த நினைவுகளுடன்

என் காதல் இரவு

காத்திருக்கும் விடியலுக்காய்

காதல் சண்டை

நீ கீரியும் இல்லை
நான் பாம்பும் இல்லை
சண்டை மட்டும்
ஓயவும் இல்லை

4/20/2015

காத்து கிடக்கிறேன்

இரவு முழுக்க உந்தன் நினைப்பில்
இதயம் தவிக்குது
கண்கள் இரண்டும் மூடிக்கொள்ள
ஏனோ மறுக்குது
நிலவு கூட தூரம் போல
எனக்கு தெரியுது
இருட்டில் கூட உந்தன் உருவம்
தெளிவாய் தெரியுது
என்னை மட்டும் காதல் செய்ய
உன்னை கேக்கிறேன் - என்
உயிரை கூட உனக்காய்த்தர
காத்து கிடக்கிறேன்

4/17/2015

நினைக்காமல் இருக்க முடியவில்லை

நினைக்காமல் இருக்க முடியவில்லை
நினைத்தாலும் இருக்க
முடியவில்லை
எதற்காக உனை பார்த்தேன் 
இதுவரை தெரியவில்லை

வேதனை

ஓட்டுவதும் வெட்டுவதும் 
ஒருநிமிட நாடகமாய் 
உறவுகளுக்கிடையில் 
நடக்கிறது
மனம் வருந்தும் 
வேதனையாய்

4/14/2015

ஏன் வேஷம் மாறி போனது

முட்டி முட்டி பார்க்கிறாய் 
முன்னால் பின்னால் திரியுறாய் 
சிவனே என்று இருந்த என்னை 
சீண்டி காதல் செய்கிறாய்
காதல் என்றால் என்னவென்று 
தெரியாமலே இருந்த என்னை 
ஆசை வார்த்தை சொல்லிக்கொண்டு 
சொன்னதெல்லாம் செய்துகொண்டு 
எந்த நேரம் கூப்பிட்டாலும் 
இல்லை என்று வந்து நின்று 
மனதை கொள்ளை கொண்டு போனாய் 
நான் மயங்கி காதல் சொல்லி போனேன்
என் காதல் சொன்ன பின்னாலே 
சனியன் தலைக்கு ஏறியதோ 
கவனிக்காமல் திரிகின்றாய் - கேட்டால் 
நேரம் இல்லை என்கிறாய்
இத்தனை நாள் நேரம் எல்லாம் 
எங்கிருந்து வந்தது 
காதல் சொன்ன பின்னாலே 
ஏன் வேஷம் மாறி போனது

4/13/2015

பெண்ணாய் உணர்ந்து வெட்கப்பட்டு

சிறுக சிறுக உன்னை நினைத்து
பெருக பெருக ஆசைகொண்டு - நீ
மீண்டும் வீடு திரும்பும்வரைக்கும்
எனக்குள்ளேயே பேசிக்கொண்டு

உனக்கு பிடித்த உணவை செய்து
உன்னை பிடித்த என்னை உணர்ந்து
மெல்ல மெல்ல சிரித்து கொண்டு 
வீடு முழுக்க அழகாய் செய்து

வந்த உடனே கட்டிபிடிக்க
கதவுக்கு பின் ஒளித்து நிக்க
திட்டம் தீட்டி எந்தன் நெஞ்சை
பித்தம் ஏறாமல் காத்து நின்று

வந்த சத்தம் கேட்டதுமே
வளையல் சத்தம் கேக்காமலே
சொன்ன இடத்தில் ஒளிந்துநின்று - என்னை
தேடும்தவிப்பை அழகாய் பார்த்து

பின்னால் சென்று கட்டி பிடித்து
முன்னாள் இழுத்து முத்தம் கொடுத்து
பெண்ணாய் உணர்ந்து வெட்கப்பட்டு
என்னால் முடிந்ததை தந்தேன் உனக்கு

4/10/2015

பிடிக்கும் காதல்

உனக்கு 
என்னை பிடிக்கும் அதிகமாக 
அதனால் எனக்கு 
உன்னை பிடிக்கிறது 
உன்னைவிட அதிகமாக

4/08/2015

உணர்வு

உடம்பும் செத்திடும் 
உயிரும் போய்விடும் 
உணர்வு ஒன்றே 
உறவாய் தொடர்ந்திடும்

4/06/2015

கழுத்துக்கு பூமாலை

என் கழுத்துக்கு 
பூமாலை 
யார் கையால் 
என்ற கனவு 
படியேறி சென்றபலரின் 
பதிலுக்காய் காத்திருகிறது

4/04/2015

காதல் என்றால் என்ன ?



காதல் என்றால் 
என்ன வென்று 
அறியும் முன்னே 

கால்தடக்கி
விழுந்து விட்டேன் 
உனக்குள் நானே

4/03/2015

அன்பான அழகு

அன்பான அழகாலே
என்தாகம் தீர்க்கிறாய் 
அழகான அன்பாலே 
என் சோகம் போக்கிறாய்

4/01/2015

வெட்கம் இன்றி சொல்லி முடிப்பேன்

உன்னை மட்டும் நினைத்துகொண்டே
எந்தன் வாழ்க்கை ஓடி செல்லும்
கண்ணுக்குள்ளே உன்னை வைத்து 
கட்டி பிடித்து தூங்க தோன்றும்

என்னை மட்டும் எங்கே பார்த்தாய் - உன்
கண்களாலே என்ன சொன்னாய்
பெண்மை என்பதை மறந்தே போனேன்
உந்தன் பார்வையால் காதல் ஆனேன்

தனியத்தானே பிறந்து வளர்ந்தேன்
துணையே இன்றி திமிராய் திரிந்தேன் - என்
தனிமைக்குள்ளே எதற்க்காய் நுழைந்தாய்
என் நேரம் எல்லாம் மெதுவாய் பறித்தாய்

நிமிடம் தோரும் உந்தன் நினைப்பு
நிமிர்ந்து பார்த்தால் உந்தன் சிரிப்பு
கனவு தோரும் உந்தன் அணைப்பு
களைத்து விட்டேன் பெண்மை மறந்து

விரல்கள் எல்லாம் நிகங்கள் வளர்த்தேன்
நிகங்கள் எல்லாம் வர்ணம் தெளித்தேன்
அழகு படுத்தி என்னை கொடுத்தேன் - உன்
அன்பின் முன்னாள் நானே தோற்றேன்

வெட்கம் இன்றி சொல்லி முடிப்பேன் - என்
காதல் எல்லாம் அள்ளி கொடுப்பேன்
எனக்குள் உன்னை விதையாய் விதைப்பேன்
என் இதையதுக்குள்ளே துடிக்க வைப்பேன்