7/29/2015

ஆயுள் வரை துடிக்குதடி

சீவி வைத்த அப்பிள்தோல்போல்
மேனி முழுக்க மினுங்குதடி
உரித்து வைத்த உள்ளியைப்போல்
கண்கள் இரண்டும் சிமிட்டுதடி

கடித்து வைத்த மிளகாய்போல்
உதடு இரண்டும் சிவக்குதடி
இழுத்து வைத்து முத்தமிட்டாலும் 
உறைக்கவில்லை இனிக்குதடி

அவித்து வைத்த அரிசியைப்போல்
ஆவி எழும்பி பறக்குதடி
இறக்குவித்த குழம்பை போல்
இதயம் ஏனோ கொதிக்குதடி

பொரித்து வைத்த அப்பளம்ப்போல்
வார்த்தை எல்லாம் நொருங்குதடி
குழைத்து நான் தின்றாலும்
உறைக்கவில்லை இனிக்குதடி

கழுவிவைத்த கோப்பையைப்போல்
கைகள் இரண்டும் குளிருதடி
பெருக்கி எடுத்த குப்பையைப்போல்
மூச்சு காற்று பறக்குதடி

துடைத்து வைத்த மேசையைப்போல்
இடை நெளிந்து சிரிக்குதடி - உனை
அணைத்தெடுத்து ஆட்கொள்ள - உயிர்
ஆயுள் வரை துடிக்குதடி

No comments: