12/08/2014

தொட்டு உன்னை எழுப்புவேன்


காலையில் கதிரவன்
எழ முன்பே
கண்முளிப்பேன்
உன் முகம் முன்பே


கண்கள் மூடிய
உன்முகத்தை
நெஞ்சில் பதித்துவிட்டு
சொண்டில் சிரிப்புடன் செல்வேன்


காலை தேநீரை கையிலெடுத்து
சேலை தலைப்பால் பொத்திவைத்து
கட்டிலருகே வந்து நின்று
தொட்டு உன்னை எழுப்புவேன்


கண்கள் முழித்து எழும்பி
என்னை பார்த்து சிரித்து
எந்தன் கையால் தேநீர்வாங்கி
எனக்கே நீ பருக்கிவிடுவாய்


இந்த தருணம் ஒவ்வொருநாளும்
கிடைக்கவேண்டும் என்றெண்ணி
கடவுள்முன் கைகூப்பி
கலங்கி மன்றாடி நிக்கிறேன்



12/05/2014

அழியாது தமிழின் ஈரம்



எலும்புகள் பொருத்தபட்ட
விலங்கிலும் கேவலமான
உருவங்கள்

மூச்சு விட முயற்சித்தாலும்
துப்பாக்கி முனையில் விசாரிக்கும்
சுதந்திரம்

வீடிருக்கு வேலியிருக்கு
வீட்டுக்குள்ளே யாருமில்லா
குடும்பங்கள்

ஊணமாக்கி முடமாக்கி
ஊர்க்காவலை பலமாக்கும்
ஆட்சியாளர்

உருக்குலைந்த பூமியினை
உக்கிரமாய் காவல்காத்து
அர்த்தம் என்ன

அண்ணனின் பெயருக்கே
அரைவாசி நிதி ஒதுக்கும்
அரசாங்கம்

என்னத்தை சாதித்தாலும்
என்றைக்கும் அழியாது
தமிழின் ஈரம்

12/01/2014

உறவுக்கு பெயர்தான் காதலே


வீசுதே தென்றல் வீசுதே
வாசலில் அவள் பொன்முகம்
கூசுதே கண்கள் கூசுதே
அவள் பார்வையில் – என் இரு கண்களே

வயலோரம் ஒன்றாய் திரிந்தோம்
வயதாகியும் பிரியா நின்றோம்
இளவட்டம் ஆன பின்பும்
இணைந்தேதான் கதைகள் சொன்னோம்

குழலோடு பீ பீ செய்து
குயிலுக்கு பாட்டு தந்து
விரலோடு விரல்கள் கோர்த்து
விளையாடி திரிந்து வந்தோம்

நாணம் கொள்ளும் அழகையும்
வெட்கம் கொள்ளும் விதத்தையும்
கற்றுக்கொண்டால் என்னிடம்
நான் சொக்கி நின்றேன் பெண்ணிடம்

பேசும் போது அழகுதான் – அவள்
பேசா நின்றால் அழுகைதான்
வேசமில்லா விருப்பத்தை
வெட்கமின்றியே சொல்கிறாள்

தோளோடு தோள் சாயவில்லை
தேகங்கள் இன்னும் முட்டவில்லை
காதோடு ஓடி வந்து
காதலென்று சொல்கிறாள்

ஒன்றாக ஊர் சுற்றினாலும்
உன்னோடு மட்டும்தானே
என்னோடு நீ வந்தாலென்ன – இந்த
உறவுக்கு பெயர்தான் காதலே

11/30/2014

ஒரு முறை உன்னுடன் பேசிடவேண்டும்




ஒரு முறை உன்னுடன் பேசிடவேண்டும் 
மறுபடி கண்களை திறந்திடவேண்டும் 
ஒரு பிடி சோற்றினை உண்டிடவேண்டும் - என்
விரல்களை சூப்பியே கை கழுவிடவேண்டும்

விடை ஒன்று சொல்லுங்கள்

அணையாத தீபத்துக்கு
ஒளியாகி நிற்பவர்களே

கருவூலம் இல்லாமல்
கடவுளான ஆண்டவர்களே

இறப்புக்கே தேதி குறித்து
இயற்கையை வென்றவர்களே

மறுபிறப்பொன்று வேண்டுமென்று
மன்றாடி அழுகின்றோம்

எம் மடிமீது உமைவளர்த்தி
தலை கோத நினைகின்றோம்

ஒரு பிடிசோறு ஊட்டிவிட்டு
உம் தாயாக எண்ணுகின்றோம்

விழி மூடி தூங்கினாலும்
உயிர் வாழும் உருவங்களே

ஒரு முறையேனும் கண்திறந்து
ஒரு வார்த்தை சொல்லுங்களேன்

உமைக்காணும் நினைப்போடு
மலர்கொண்டு வந்துள்ளோம்

உம் கல்லறையை கட்டித்தழுவி
கதறி கதறி அழுகின்றோம்

உம்மோடு பேசுகின்றோம்
உமக்கங்கு கேக்கின்றதா

விண்ணோடு கலந்தவர்களே
விடை ஒன்று சொல்லுங்கள்

9/23/2014

கொடுப்பனவு



எந்த செடி கொடுத்து வைத்தோ 

தான் பெத்த பூ பிள்ளை 
உந்தன் கழுத்தில் 
மாலையாக !

9/22/2014

பெண் கவிதை


உதட்டினிலே
குறுங்கவிதை
உன் இடையினிலே
ஹைக்கு கவிதை
மார்பினிலே
மரபுக்கவிதை
உண்மைடியினிலே -நான்
தமிழ் குழந்தை

9/19/2014




ஒத்திகை பார்த்த                                                                       
ஓராயிரம் விடயங்கள்                                                                    
ஒற்றைக்குரலில் மௌனிக்க                                           
மௌனமானேன்
 நீ                                                                                                             
என் மௌனத்தின் 
பிரியன் என்பதால்   

9/18/2014

ஒருமுறை சொல்லிவிடு


ஒருமுறை சொல்லிவிடு 
அங்கே என் இதயம் துடிக்கிறதா என்று 
ஒருமுறை சொல்லிவிடு 
இன்னும் என்ன உயிர் இருக்கிறதா என்று 
ஒருமுறை சொல்லிவிடு 
இன்னமும் உன் காதல் உண்மையா என்று 
ஒரே ஒருமுறை சொல்லிவிடு 
உன்னிடம் இருப்பது என் இதயம்தானா என்று

9/17/2014

காயம்


நெஞ்சை
துளைக்கும்
வார்த்தை
இரத்தம்வராத
காயம்

9/16/2014

கடிவாங்கியும் காதலிக்கிறேன்


ஆசைப்பட்டு துடிக்கும்
இதயத்தை
வெட்கப்பட்டு மறைக்கும்
தாவணிக்குள்
என் மூச்சுகாற்றின்
முத்தங்கள்

வேசமில்லா உன்கண்கள்
சிமிட்டுகின்ற சிரிப்பில்
பாசமுடன் பணிந்து
உதடுகுவிக்கும் சிவப்பில்
காயப்பட்ட என் இதயத்துக்கு
மருந்து

காற்றே இல்லாதபோது
ஆடிடும் உன் இடையில்
காயப்போட்டதுபோல் அசையும்
உன் சேலைத்தலைப்பில்
என் தேவதைக்கான
திருவாசகம்

கொலுசுமணிகள்
குழுங்கி ஆட
மூச்சுகாற்று வளைந்துவீச
பறந்தோடும் கூந்தல்
விருந்தாகும்
கண்களுக்கு

யாருமில்லா நேரம்
வெட்கம் மட்டும்
துணைவர
நான் கவ்விக்கொள்ளும்
இதழ்களில்
முளைத்தது உன்
முள்ளு பற்கள்

இது ஆசைப்பட்டு
கடித்ததா
அசையாமல் இருக்க
கடித்ததா - நான்
கடிவாங்கியும்
காதலிக்கிறேன்
பிடிவாதமாய்
உன்னை தான்

9/15/2014

நனையவில்லை


மழையில் நிக்கிறேன்
உன் நினைவுடனே
நனையவில்லை
குடையுமில்லை

9/11/2014

அம்மா ......மன்னிப்பு கேக்கின்றேன்



மனதோடு மனம் வைத்து
மன்னிப்பு கேக்கின்றேன்
தினம் உன்னை பார்பதற்க்காய்
தெரியாமல் பேசிவிட்டேன்

யாரிடம் நான் போவேன்
அதை யாரிடம் நான் கேட்பேன்
அன்பினில் விளைந்த அம்மாவாய்
உன்னையே நான் பாக்கிறேன்

குழந்தை மனசு கொண்ண்டதனால்
குழப்படிகள் பல செய்துவிட்டேன்
அடம்பிடித்து அழுதுவிழுந்து
அரியண்டம் கொடுத்துவிட்டேன்

பாசத்தை நீ தரவேண்டும் - காக்கை
குஞ்சாக பார்க்கவேண்டும்
கண்மூடி தூங்குவதற்கு - நல்ல
நிம்மதி நீ தரவேண்டும்

9/10/2014

காதல்



இதயம் நினைப்பதை 

கண்கள் சொல்லும் 
உதடுகள் மட்டும்
அமைதியாய் இருக்கும் 



காதல்

9/09/2014

தெய்வங்கள் இன்று

தெய்வங்கள் இன்று
அங்கங்கள் இழந்து
புகழ் இழந்து போனதால்
மனிதனால் மறந்து
துன்பங்கள் கொண்டு
சோகங்கள் தாங்கி
தன்மாணம் மறந்து
உதவி கேட்க
வைத்துவிட்டான்
 
துப்பாக்கி ஏந்தி
சொந்த மண்ணை காக்கையில்
அக்காக்கள் என்றும்
அண்ணாக்கள் என்றும்
புகழோடு வாழ்த்தி
பொருளாக கொடுத்து
புன்னகைத்த மனிதன்

வெட்கமா



நிலம் கழுவும் அலைகடலில்

உன் முகம் புதைத்து 
நெஞ்சில் சாய 
இத்தனை ஆசையா ...
அதை நேரில் சொல்ல 
இத்தனை வெட்கமா 
என் வண்டி சாவியை 
கடலுக்குள் வீசிவிட்டாயே

9/08/2014

தமிழ் மூச்சு

மூச்சு விடும் போது
தமிழ் மூச்சாய் இருக்கட்டும்
மூச்சை விடும் போது
தமிழ் மூச்சாய் இருக்கட்டும்

9/07/2014

தங்க தேர் பட்டு


தென்னை மர இளநீர் 
கண்களடி உனக்கு - 
அது வெட்டி மோதி பார்க்கும் 
 அழகோ தனி அழகு 

 என்னை சுற்றி ஓடும்
 காலில் இரு கொலுசு
 தாளம் போட்டு நடக்கும்
 நடையே புது விருந்து 

 நெற்றி புருவம் நடுவில்
 சிவந்த குங்கும பொட்டு
 சேலையில் நீவந்தால்  
தங்க தேர் பட்டு

7/29/2014

நீ பெண்மையன்றோ


விடிவெள்ளி விழுங்கிய 

கண்கள் இரண்டில் 
மின்னலை சேர்த்துவைத்த 
பெண்மை சொண்டில் 
வெண்ணிலா விளையாடும் 
வானவெளியில் 
வெட்கத்தை விலைபேசிடும் 
உன் கன்ன குழிகள் 

என்னவென்று சொல்லுவேன் 
என் நெஞ்சத்து ஊஞ்சலை 
அது தள்ளாடி விழுகிறது 
பெண்மையின் சோலையில் 
மகரந்தம் தெளித்திடும் 
போதை மலர் தேனில் 
நான் மயங்குகிறேன் தயங்குகிறேன்
காதலெனும் சிறு தீவில் 

மடியாத இடையினிலே 
மடியை வைத்து 
விடியாத வேளையிலே 
விருந்து கொண்டு 
சிணுங்காத உன்தேகம் 
நெளிந்து கொள்ள 
நான் சிலுர்கின்றேன் சிரிக்கின்றேன் 
வெற்றி கண்டு 

தவம் கொண்ட முனிவனும் 
தவறி விழுவான் - உன் 
முகம் கொண்ட மௌனத்தை 
கண்டுவிட்டால் 
நான் தினம் சாகும் 
புது மோகம் உன்னிடத்தில் இருந்தும் 
சினக்காமல் இருகின்றாய் 
நீ பெண்மையன்றோ