தெரியாமல்
வெட்கப்பட தெரியாமல்
வெட்ட வெளிச்சத்தில் வெட்கி
காதலை காட்டிகொடுத்துவிடாயே
மௌனமொழி பேசும் கண்கள்
காந்த விழியை கவர்ந்து
நாணத்தை உடல்பரவி
நரம்புகளை நெளியவைத்துவிட்டனவோ
இல்லாத இடை
எங்கிருந்து முளைத்தது உனக்கு
அது தள்ளாடி நிப்பதை
என்னெவென்று சொல்ல்வது
பாத விரல்களில் எப்போ
பேனா முளைத்தது
பார்க்காமலே கோலம்போட
யார் சொல்லி தந்தது
உதடு கடிக்கும் அளவுக்கு
உனக்கு என்னடி வெட்கம் – பாவம்
ஒத்தடம் கொடுப்பதற்கு – அது
தேடுகிறது ஒரு சொந்தம்
குளிரில் தானே புல்லரிக்குமென்றாய்
கையில் இருக்கும் சிறு ரோமங்கள்
இந்த வெயில்ளிலும் புல்லரிக்கின்றனவே
ஏன் கூர் கொண்ட பார்வையாளா
கிட்டவரும் போதே
முட்ட வருகிறேனென்று எண்ணுகிறாய்
தொட்டு பார்க்குமுன்பே
கையை தட்டி பறிக்கிறாய்
தெரியவில்லையா நான் இன்னும்
கிட்டவே வரவில்லை என்று
வெட்கப்பட தெரியாமலேயே
வெட்குகிராயே .........
Tweet | |||||