9/25/2011

அத்தை மகள் சுவைதானோ



நெஞ்சினிலே தஞ்சம் கொள்ளும்
தேவதை இவள்தானோ
கண்களாலே கவிதை சொல்லும்
அத்தை மகள் சுவைதானோ

கேள்வி குறியாய் கெஞ்சிநிக்கும்
வஞ்சிக்கொடி இடைதனோ
வேண்டும் என்றே கொலை செய்யும்
இதழ் இரண்டும் மலர்தனோ

அள்ளி அணைக்க சொல்லிநிக்கும்
அடக்கமான மெல் உடல்தானோ
அமைதிக்கு விலை பேசும்
வட்டநிலா முகம்தானோ

கற்பனை தரும் கவிதைகளில்
காதல் சொல் இவள்தானோ
கடைசிவரை கூடவரும்
அன்பு காதலன் நான்தானோ

9/18/2011

காதல் கடவுள் மட்டும் கல்லு

பரந்தவெளி வானம்
பரவிக்கிடக்கும் மேகம்
சிதறிக்கிடக்கும் நட்சத்திரம்
சிரித்து பேசும் வெண்ணிலா

அழுது வடிக்கும் மழை
அழகாய் பிடிக்கும் குடை
ஓடித்திரியும் வெள்ளம்
நிரம்பி வழியும் உள்ளம்

பச்சைக்கடல் வயல்
பாகம் பிரிக்கும் வரப்பு
முத்து முத்தாய் நெல்லு
வெள்ளை நெல்லாய் அவள் பல்லு

கரையை கழுவும் கடல்
நுரையை பருகும் மணல்
ஓடித்திரியும் நண்டு
தேடித்திரியும் என் மனது

பனைமரம் விழுந்த வீதி
இரு மருங்கிலும் புல்லினச்சாதி
விரிந்து ஒடுங்கிடும் கண்கள்
அவள் வீட்டுக்கு போகும் கால்கள்

முளை நிமிர்ந்த கோவில்
மடை திறந்த கருணை
கல்லு முழுக்க கடவுள்
காதல் கடவுள் மட்டும் கல்லு

9/11/2011

மோக போதை நகரம்



படபடக்கும் இயந்திர இதயம்
பெருமூச்சு விடும் புகைபோக்கி
உழைத்தால் தான் உயிர்பிழைகமுடியுமென
தயார்படுத்தும் மனிதவலு நகரம்

காலைக்காய் கண்மூடி காத்திருந்து
கூட்டை விட்டு பறந்துபோகும்
பறவைகளாய் மனிதர்
உலகுடன் போராட வியர்வைசிந்தும்

இறுகிய முகங்கள் கொண்டு
இதிகாசம் படைப்பதாய் எண்ணி
உடல் உழைப்பை உறிஞ்சவிடும்
ஊமையாகும் எலும்புக்கூடுகள்

மகிழ்ச்சிக்கு வடிவமைக்கபட்ட
மது மாது பாணக்கடைகளிலே
உதடுருஞ்சி உடல் குளுங்கி
உற்சாக மோகம் கொள்ளும்

குடும்ப உறவை காட்டுவத்தில்லை
குழந்தை அன்பை பேசுவதில்லை
குடும்பம் என்றால் வளர்ச்சிக்கு
தடைவிதிக்கும் படிக்கல் என்றும்

தனியாக பிரித்துவைக்கும்
தனக்கென்றே தயார் படுத்தும்
புரட்சி என்று சொல்லிகொன்று
மனிதத்தை அழித்திவிடும்

ஊரை விட்டு நகரம் வந்து
உலக வணிகத்தில் உருண்டுபிரண்டு
வயதாகி நரை வந்தததும்
குடும்ப உறவை தேடிச்செல்லும்

நகரம் என்பது நரகமாகி
துயரம் தரும் சிகரமாகி
ஊர் நினைப்பை அழித்துவிட்டு
பணத்தை காட்டி போதை செய்யும்

9/04/2011

அவசரத்தில் விடிந்த அதிகாலை


கரும்பறவை சிறகடித்து
வானவெளியில் பறக்க
சிறு கீற்றாய் சூரிய ஒளி
உலகம் எங்கும் பரவ
வெட்கம் கொண்ட மேகக்கூட்டம்
விலகியே ஓடிவிட
புலர்ந்தது காலை
புதுப்பொழிவுதர

இடை நெளிந்து உடல் வளைந்து
நிமிர்ந்து நிற்க்கும் மரங்கள்
உரிமையோடு உட்கார்ந்து
இசைபடிக்கும் குயில்கள்
அழகுடனே தலையசைத்து
மலர் தூவும் இலைகள்
அதிகாலை பொழுதுக்கு
அர்ச்சனை தூவும் குருக்கள்

ஊருக்கு குறுக்கே ஓடும்
கறுப்புத்தார் ரோட்டு
உடல் முழுக்க ஈரமாகி
தலை குனியும் புல்லு
நீட்டி நிமிர்ந்து நிற்க்கும்
அணையாத மின்கம்பம்
புலர்கின்ற காலைக்கு
தீபமிடும் பூசாரி

ஆங்காங்கே அசையத்தொடங்கும்
மனித வலுக்கூ ட்டம்
அவர்களை ஏத்திச்செல்லும்
வாகனங்களின் சத்தம்
ஒருக்காலும் நின்றதில்லை
நிதானமாய் பார்த்ததில்லை
அழகாக புலர்கின்ற
அதிகாலை பொழுதுதனை