8/30/2011

செங்கொடி வெந்ததோ தீயினில்



உன்னையே கொன்று
எம்மை கொல்கிறாய்
உயிர்களை மதித்தே
உன் உயிரினை விட்டாய்

எப்படி நியாயம்
நீ செய்தது
உன்னை பெத்தவளுக்கு
பொறுப்பு யாரது

ஈழத்து நெஞ்சங்கள்
ஒரு போதும்
உயிர்பலி கேட்க்க
இல்லையம்மா

நாம் நொந்தது போதும்
செங்கொடியே
இவள் செய்தது வேண்டாம்
எம் இனமே

8/21/2011

நட்பு


நீ சிரித்தால்
நட்பும் சிரிக்கும்
நீ அழுதால்
நட்பு துடிக்கும்

நீ நடந்தால்
நட்பும் நடக்கும்
நீ விழுந்தால் - (நட்பு)
கை கொடுக்கும்

நீ உயர்ந்தால்
நட்பு மகிழும்
நீ மறந்தாலும் - (நட்பு )
உன்னை நினைக்கும்

8/14/2011

நான் வருவேன் மறுமுறை


மீண்டும் ஒருமுறை என்
மண்ணை மிதித்திட
வேண்டும் விடுதலை

நான் ஆண்ட பூமியை
தோண்டி பார்த்திட
வேண்டும் பலமுறை

நான் விட்டு வந்த
சொந்த பந்தங்கள்
செத்தது எதுவரை

அவர் வீர எலும்பினை
தேடி எடுத்து
தேடவேண்டும் உறவினை

அன்னை மடியினில்
தலை சாய்ந்த வயதினில்
மறந்தேன் உலகினை

என்
அன்னை மண்ணிலே
தலை சாய்த்தபோது
இழந்தேன் உலகினை

உண்மை மகனாய்
ஒற்றை மகவாய் - என்ன
செய்தேன் இதுவரை

பெற்ற தாயையும்
சொந்த மண்ணையும்
விட்டேன் அது குறை

கூடி குழாவி
கும்மி அடித்த
உறவுகள் உள்ளீரோ

ஒருவர் இருந்தாலும்
தந்தி அனுப்புங்கள்
நான் வருவேன் மறுமுறை

8/07/2011

தமிழ் அன்னையின் கதறல்

டிஸ்கி - ஈழதமிழ் சமுகத்தின் முதுபெரும் புலமையாளர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் மறைந்தது ஒருமாதம் ஆகின்றது அதை முன்னிட்டு



தமிழுக்கு பிறந்தவனே
தமிழோடு வளர்ந்தவனே
தமிழுக்குள் ஆய்வு செய்து
தமிழையே வளர்த்தவனே

நீ இன்றி தமிழ் இல்லை
தமிழ் இன்றி நீ இல்லை
உலகத்தில் தமிழ் மொழியை
தலை நிமிர்த்திய என் பிள்ளை

இயல் இசை நாடகத்தில்
இயல்புடனே இசைந்தவனே
நாட்டுப்புற நாடகத்துக்கே
நாட்டாமை ஆனவனே

சமூகவியல் பொருளியலில்
அறிவுத்திறன் கொண்டவனே
மாக்சிச கொள்கையிலே
மாறாமல் வந்தவனே

பர்மிங்காம் பல்கலையில்
தமிழ் கற்க சென்றுவிட்டு
நீ செய்த ஆய்வினால்
தமிழ் உன்னை கற்றதடா

இலக்கணங்கள் இலக்கியங்கள்
எடுத்தவுடன் பறந்து வரும்
நீ எழுதிய புத்தகங்கள்
நினைக்கவே தமிழ் வளரும்

கைலாசபதி மௌனகுரு என
தமிழ் நட்பு கொண்டவனே
பிழையென்றால் நேரே சொல்வாய்
கலைஞ்ஞசருக்கே மறுப்பு சொன்னாய்

தமிழில் உள்ள பற்றுனாலே
மண் மீது காதல் கொண்டாய்
தமிழருக்கு தீர்வு காண
அரசியல் கொள்கை கொண்டாய்

தமிழ் துறையில் நீ தலைவன்
புத்தகத்தில் நீ புலவன்
எத்தனை பேருக்கு உன்கையால்
தமிழ் பால் கொடுத்திருப்பாய்

ஈழத்தமிழ் சமுகத்தின்
முது பெரும் முனைவரே
காலத்தின் கட்டளையால்
கண் மூடி விட்டாயே

கதறுவது மக்களல்ல
தமிழ் மொழியும் கூடத்தான்
பிரிந்தது நீ அல்ல
தமிழ் சிறப்பும் சேர்த்துதான்

மிக்சி - கலைஞ்ஞருக்கே மறுப்பு சொன்னாய் - செம்மொழி மாநாட்டுக்கு பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுக்கு அழைப்பு வந்ததும் கலைஞ்ஞர் கருணாநிதியிடம் ஈழத்தமிழர் பற்றிய தெளிவான கொள்கை இல்லை ஆதலால் கலந்துகொள்ள மாட்டேன் என மறுப்பு கடிதம் அனுப்பியவர்

இறுதி சேர்க்கை

இவர் கடைசியாக கலந்து கொண்ட சர்வதேச மாநாடு, கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாடுதான். இந்த மாநாட்டுக்கு அவர் வருவது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இருப்பினும் தமிழுக்காக செல்கிறேன் என்று கூறி கலந்து கொண்டார்.

இவர் மறுப்பு கடிதம் அனுப்பியதும் உண்மை கலந்து கொண்டதும் உண்மை

தவறுக்கு வருந்துகின்றேன்
நன்றி காட்டான்