4/21/2015

காத்திருக்கும் விடியலுக்காய்




என் காதல் இரவு

மலர்கள் பூத்து

காத்து கிடக்கும்

மாலை நேரத்தில்


வண்டுகள் தேன்முட்டி

மயங்கி கிடக்கும்

அந்தி நேரத்தில்


உன் கை பிடித்து

கூட்டிசெல்வேன்

பூங்காவுக்கு


கல்லில் செய்த கதிரையில்

கைகள் இரண்டும்பற்ற

கதைகள் பேசுவேன் - உன்

கண்களையே நான் பார்ப்பேன்


சின்ன சின்ன சினுங்களும்

குட்டி குட்டி கோவமும்

மெல்ல தோளில் சாய்தலும்

எல்லாம் சேர்ந்து ஒரு காதலாய்


விட்டு கொடுக்கா பேச்சுக்களும்

கிட்ட வந்து முட்டி நிப்பதும்

சொட்ட சொட்ட

தேன் ஊரும் சொண்டுகளும்

சூரியனையயே கண்ணடித்து

மறைத்துவிடும் கடலுக்குள்


மெல்ல காலால் கோலமும்

மெல் கூந்தல்

கையில் சிக்குவதும்

தீண்ட ஏங்கி

எல்லை தாண்டா நிப்பதும்

வேண்டுமென்றே

தோள் முட்டி கதைப்பதும்

வேதம் சொல்லும் காதலாக


மாலை மறைந்து

கண்கள் இருட்ட

மனமே இல்லாமல்

கால்கள் எழும்ப

வீடு செல்லும் வேளையில் - என்னை

விட்டு சென்றாய் சாலையில்


அந்த நினைவுகளுடன்

என் காதல் இரவு

காத்திருக்கும் விடியலுக்காய்

1 comment:

தனிமரம் said...

அருமையான கவிதை.