முட்டி முட்டி பார்க்கிறாய்
முன்னால் பின்னால் திரியுறாய்
சிவனே என்று இருந்த என்னை
சீண்டி காதல் செய்கிறாய்
காதல் என்றால் என்னவென்று
தெரியாமலே இருந்த என்னை
ஆசை வார்த்தை சொல்லிக்கொண்டு
சொன்னதெல்லாம் செய்துகொண்டு
எந்த நேரம் கூப்பிட்டாலும்
இல்லை என்று வந்து நின்று
மனதை கொள்ளை கொண்டு போனாய்
நான் மயங்கி காதல் சொல்லி போனேன்
என் காதல் சொன்ன பின்னாலே
சனியன் தலைக்கு ஏறியதோ
கவனிக்காமல் திரிகின்றாய் - கேட்டால்
நேரம் இல்லை என்கிறாய்
இத்தனை நாள் நேரம் எல்லாம்
எங்கிருந்து வந்தது
காதல் சொன்ன பின்னாலே
ஏன் வேஷம் மாறி போனது
Tweet | |||||
1 comment:
மிகவும் அருமையான ஏக்கம்
Post a Comment