நதி ஒன்று
சேலைக்குள்
நெளிகிறது வளைகிறது
என் இதயமும் இரு விழிகளும்
தென்றல் உரசிடும்
தேகத்தை மறைத்திடும்
சேலைக்குள்
வெட்கத்தின் குவியலாய்
என் காதல்
பறக்கின்ற தாவணியில்
சிலிர்க்கின்ற தேகத்தில்
ரகசியம்தேடும் காற்றுடன்
நானும் சேர
வளைகின்றது நதியாய்
சேலை தேகத்தில்
நெளிகின்றது இடை
இடைவிடா போரட்டத்தில்
நடைமட்டும் காட்டி
கொடுத்துவிட்டது - என்
காதலை
Tweet | |||||
No comments:
Post a Comment