8/31/2015

நதி ஒன்று சேலைக்குள்

நதி ஒன்று 
சேலைக்குள் 
நெளிகிறது வளைகிறது 
என் இதயமும் இரு விழிகளும்
தென்றல் உரசிடும் 
தேகத்தை மறைத்திடும் 
சேலைக்குள் 
வெட்கத்தின் குவியலாய் 
என் காதல்
பறக்கின்ற தாவணியில் 
சிலிர்க்கின்ற தேகத்தில் 
ரகசியம்தேடும் காற்றுடன் 
நானும் சேர
வளைகின்றது நதியாய் 
சேலை தேகத்தில்
நெளிகின்றது இடை 
இடைவிடா போரட்டத்தில்
நடைமட்டும் காட்டி 
கொடுத்துவிட்டது - என் 
காதலை

No comments: