8/14/2015

கண்ணை மூடுகிறேன் காதல்கொள்ளு

நெஞ்சம் முழுக்க உன்னை நினைத்து 
பஞ்சு மெத்தையில் படுத்தாலும் 
கண்கள் மூட மறுக்கிறது
கனவு என்னை கலைக்கிறது
செங்கமல இதழ்விரித்து
சொல்லுகின்ற வார்த்தை ஒன்றை 
கண்கள் தேடி அலைகிறது – இது 
காதல் என்று புரிகிறது
பிஞ்சு விரல்கள் பட்டதுமே 
அஞ்சி சுருங்கும் இடை எனது 
உன் பத்து விரல் படுவதற்காய் 
பாய்விரித்து கிடக்கிறது
கொஞ்ச நேரம் என்னைப்பார்த்து
கொஞ்சி குலாவ நேரம் ஒதுக்கு 
உந்தன் இதய கோவில் வாழும் 
தெய்வமன்றோ நான் உனக்கு
சிவனும் சக்தியும் இமையமலையில் 
அர்த்தனா தீஸ்வரராய் உந்தன் மடியில் 
கற்ற வித்தை மொத்தம் இறக்கு 
கண்ணை மூடுகிறேன் காதல்கொள்ளு

No comments: