8/28/2015

சந்தோசத்தில் பயணிக்கிறேன்

மேனியை தொட்டும் தொடாமலும் 
பட்டுச்செல்லும் இதமான 
இனிய காலைப்பொழுதில்தான்
என் தேவதைக்கான நேரம் 
குறிக்கபட்டிருந்தது

என்ன சந்தோசம் 
குயில்களும் குட்டி குருவிகளும் 
மலர்களும் வஞ்சனை இல்லாமல் 
முகத்தை மலர்ந்தே வைத்திருந்தன 
பேருந்து தரிப்பிடத்தில் 
தனியாகத்தான் காத்திருந்தேன் 
அனாலும் நான் 
தடக்கி விழுந்துவிட்டேன்

சில்லென்ற மெல்லிய காற்று 
முகவுரை வாசிக்கும்போதும் 
நான் கேட்க்கவில்லை 
பரவாயில்லை என் நெஞ்சுக்குள் 
நீ முழு உரையையும் வாசித்துவிட்டாய் 
இதுவரை என் மனதினில் 
தோன்றாத வரிகளை தோன்றவைத்தாய்

நீ அழகிதான் இருந்தாலும் 
மலர்களும் முழு நிலவும் உன்னுடன் 
போட்டி போட்டு நிக்கின்றன 
இருந்தும் உன் சிரிப்பால் 
அனைத்தையும் கொள்ளையடித்துவிடுகிறாய் 
அது போதும் எனக்கு 
நான் ஆனந்தப்பட 
இருந்தாலும் திமிர்பிடித்த 
உன் கூந்தல்கள் 
அங்கும் இங்கும் ஆடும்போது 
எனக்கு நெஞ்சுக்குள் பயம்தானடி 

பேரூந்தும் வந்துவிட்டது 
இன்றும் நான் மௌனித்த நினைவுடனே 
ஆனாலும் போராடாமல் 
உன் பார்வை ஒன்று கிடைத்த 
சந்தோசத்தில் பயணிக்கிறேன்

No comments: