8/19/2015

நான் தாயாக தயாராய் இருக்கிறேன்

கண்மூடிய இரவுகளில் 
உன் கைஅரவணைப்பில் 
நான் தூங்க
மூசுகாற்று முட்டித்தெறிக்க 
முழு உடலும் உனை தழுவ
நெஞ்சினிலே வீணி வடிந்தோட
திடுக்கிட்டு நான் எழும்பும் நேரத்திலும்
இரவிரவாய் வாய் புசத்தும் நேரத்திலும்
தலையை தடவி தூங்கவைக்கும் 
உனை நம்பி 
நான் தாயாக தயாராய் இருக்கிறேன்

No comments: