8/26/2015

தவிக்காமல் தவிக்கின்றேன்

விழுந்து தெறிக்கும் மழைத்துளியில் 
எழும்பி குதிக்கும் நீர்த்துளியாய் - உனை 
நினைத்து துடிக்கும் என் இதயம் 

குடை கொண்டுவந்து 
காகித படகொன்றுவிடும் 
குட்டி குழந்தையைப்போல் என் காதல் 

இலைகள் வருடி இதமாய் ஒழுகி 
மலர்களில் முட்டும்மழைத்துளியாய் 
என் உள்ளம் 

சிறு எறும்பு ஒன்று ஊர்ந்து 
காய்ந்த நிலமொன்றை தேடும் 
நீண்ட பயணம் போல் 
என் பார்வை 

நீ நனைந்திட்ட மலராய் 
தலை குனிந்திட்டபடியே 
மின்னுகின்றாய் கண்களாலே 

இடி இடிக்காத குறையாய் 
இதயத்தில் வெடிக்க 
தலை துவட்டாமல் திரிகிறாய் 
மழை நாளில் 

நிலை கம்பிகள் தடுக்க 
யன்னலின் பின்னால 
உனை ரசிக்கின்றேன் தேவி


தேவி ஸ்ரீ தேவி 
உந்திருவாய் மலர்ந்தொரு 
வார்த்தை சொல்லிவிடமா 
ஒலிக்காமல் ஒலிக்கின்றது 
மனதில் 

நான் தவிக்காமல் தவிக்கின்றேன் 
தனி அறையில்

No comments: