9/16/2014

கடிவாங்கியும் காதலிக்கிறேன்


ஆசைப்பட்டு துடிக்கும்
இதயத்தை
வெட்கப்பட்டு மறைக்கும்
தாவணிக்குள்
என் மூச்சுகாற்றின்
முத்தங்கள்

வேசமில்லா உன்கண்கள்
சிமிட்டுகின்ற சிரிப்பில்
பாசமுடன் பணிந்து
உதடுகுவிக்கும் சிவப்பில்
காயப்பட்ட என் இதயத்துக்கு
மருந்து

காற்றே இல்லாதபோது
ஆடிடும் உன் இடையில்
காயப்போட்டதுபோல் அசையும்
உன் சேலைத்தலைப்பில்
என் தேவதைக்கான
திருவாசகம்

கொலுசுமணிகள்
குழுங்கி ஆட
மூச்சுகாற்று வளைந்துவீச
பறந்தோடும் கூந்தல்
விருந்தாகும்
கண்களுக்கு

யாருமில்லா நேரம்
வெட்கம் மட்டும்
துணைவர
நான் கவ்விக்கொள்ளும்
இதழ்களில்
முளைத்தது உன்
முள்ளு பற்கள்

இது ஆசைப்பட்டு
கடித்ததா
அசையாமல் இருக்க
கடித்ததா - நான்
கடிவாங்கியும்
காதலிக்கிறேன்
பிடிவாதமாய்
உன்னை தான்

No comments: