12/05/2014

அழியாது தமிழின் ஈரம்



எலும்புகள் பொருத்தபட்ட
விலங்கிலும் கேவலமான
உருவங்கள்

மூச்சு விட முயற்சித்தாலும்
துப்பாக்கி முனையில் விசாரிக்கும்
சுதந்திரம்

வீடிருக்கு வேலியிருக்கு
வீட்டுக்குள்ளே யாருமில்லா
குடும்பங்கள்

ஊணமாக்கி முடமாக்கி
ஊர்க்காவலை பலமாக்கும்
ஆட்சியாளர்

உருக்குலைந்த பூமியினை
உக்கிரமாய் காவல்காத்து
அர்த்தம் என்ன

அண்ணனின் பெயருக்கே
அரைவாசி நிதி ஒதுக்கும்
அரசாங்கம்

என்னத்தை சாதித்தாலும்
என்றைக்கும் அழியாது
தமிழின் ஈரம்

No comments: