7/20/2015

என் விடிவு உந்தன் கைகளிலே

நிமிட முள்ளு குத்துதடி
உனக்காக காத்திருக்கும்வேளையிலே

தொலைபேசிக்கே வலிக்குதடி
உன் குறுந்தகவல் காணும்வரை

விடியும்வரை காத்திருக்கிறேன்
நிலவு கூட மறையுதடி

நான் சிரிக்காமல் இருப்பது
நீ செய்த வேலையடி

கனவு கூட கண்டுவிட்டேன்
கண் இமைக்கா வேளையிலே

காதல் மட்டும் கூடவில்லை
நான் என்ன செய்வேன் காதலியே

விடைகூட சொல்லவில்லை - நீ
விரும்புகிறாயா என்றும் தெரியவில்லை

இரவுடனே களிக்கின்றேன்
என் விடிவு உந்தன் கைகளிலே

No comments: