என்னோடு கதை பேச
வாராயோ வெண்ணிலவே
என் தலையணைகள் ஈரமாகுது
நீர் வடியும் கண்களாலே
காதல் என்பது பிறந்ததே
அன்பு கொண்ட பெண்களாலே
அந்த காதலுக்காய் நீதிகேட்டு
வந்து நிக்கிறேன் உன் முன்னாலே
உன்னை போல் நானும்
அழகு என்று சொன்னதாலே
இதையத்தை நழுவவிட்டேன்
அவனிடம் என் கைகளாலே
ஒளிதரும் நிலவாய் இருந்தேன்
அவன் உலகினிலே
இன்று
இருட்டடித்து சென்றுவிட்டான்
என் இனிய வாழ்வினிலே
என்னோடு கதை பேச
வாராயோ வெண்ணிலவே
நான் தனிமையிலே தவிக்கிறேன்
பதில் சொல்லையோ வெண்ணிலவே
Tweet | |||||
1 comment:
பல பாடல்கள் ஞாபகம் வந்து சென்றது...
Post a Comment