7/13/2015

நான் தனிமையிலே தவிக்கிறேன்

என்னோடு கதை பேச
வாராயோ வெண்ணிலவே

என் தலையணைகள் ஈரமாகுது
நீர் வடியும் கண்களாலே

காதல் என்பது பிறந்ததே
அன்பு கொண்ட பெண்களாலே

அந்த காதலுக்காய் நீதிகேட்டு
வந்து நிக்கிறேன் உன் முன்னாலே

உன்னை போல் நானும்
அழகு என்று சொன்னதாலே

இதையத்தை நழுவவிட்டேன்
அவனிடம் என் கைகளாலே

ஒளிதரும் நிலவாய் இருந்தேன்
அவன் உலகினிலே

இன்று

இருட்டடித்து சென்றுவிட்டான்
என் இனிய வாழ்வினிலே

என்னோடு கதை பேச
வாராயோ வெண்ணிலவே

நான் தனிமையிலே தவிக்கிறேன்
பதில் சொல்லையோ வெண்ணிலவே 

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

பல பாடல்கள் ஞாபகம் வந்து சென்றது...