7/27/2015

ஒரு தாய் மடி கொடு

கவலை
எதிர்பார்ப்புக்கள்
ஏமாற்றமானபின்பு
எதிர்பர்காமலேயே வருகிறாயே
தேவையானவர்கள்
காயப்படுத்தியபின்பு
தேவை இல்லாமலே வருகிறாயே
விருப்பமானவர்கள்
வெறுக்கின்றபோது - நான்
விரும்பாமலேயே வருகிறாயே
காயங்கள் வந்தாலும்
ஏமாற்றம் நடந்தாலும்
சிரிக்க வேண்டும் நான்
கவலையே இலவச கவலையே
தேவை இல்லை நீ போய்விடு
இறைவா என் கவலை தீர்க்க
ஒரு தாய் மடி கொடு

No comments: