வீடு மேலே கூடு கட்டி
கூடுக்குள்ளே குஞ்சு பொரிச்சு
பாசத்துடன் வளர்த்துவரும்
குருவிபோல இருந்த வாழ்க்கை
கூடு உடைஞ்சு குருவிபறந்து
தேசமெங்கும் சிதறி வாழ்ந்து
பாசத்துக்கை ஏங்கி தவிக்கும்
தனிமை குயில் ஆனதேனோ
சின்னஞ்சிறு வீட்டுக்குள்ளே
சில்லறையாய் நாலு அரிசியுடனெ
கஞ்சி குடித்து வாழ்ந்த காலம்
பஞ்சு மெத்தையில் கிடைத்திடுமோ
சொந்த மண்ணில் முள்ளு வேலி
சொந்தங்களுக்குள் சண்டை போட்டி
சொந்தமாக வீடிருந்தும்
அகதி வாழ்க்கை வெளிநாட்டில்
Tweet | |||||
1 comment:
அருமையான முடிப்பு!கஞ்சிக்கு இருந்த சந்தோஸம் இன்று பீஷாவில் இல்லை!ம்ம்
Post a Comment