7/01/2013

அவள் காதலிக்க வந்த சம்சாரம்


புன்னகை பூக்கும் உன் முகத்திலே 
நான் பூக்கிறேன் அந்திபொழுதிலே 
கண்களில் தெரியும் அன்பிலே 
காதலின் அழகை காண்கிறேன் 

பெண்ணவள் எனக்காய் பிறந்தவள் 
அந்த பிரம்மனே எனக்கு சொன்னவன் 
விண்ணிலே ஒற்றை நிலவுதான்- அது 
விழுந்தது எந்தன் மடியில்தான் 

உள்ளத்தில் உணர்கிறேன் உச்சாகம்
அவள் உதட்டிலே இனிய மதுபானம்
கட்டி அணைக்கையில் அழகிய மின்சாரம் 
அவள் காதலிக்க வந்த சம்சாரம்

No comments: