7/01/2013

இரவுக் கவிதைகள்


ஒரு இரவில்
ஒரு நிலவு
இரு விழிகள்
தூங்குது
..................................
கறுப்பு இரவில்
கண்கள் மூடியபின்
நிலவு எதற்கு
..................................
நிலவின் ஒளியில்
கண்கள் இருட்ட
இரவு வணக்கம்
................................
இரவில் விழிகள் தூங்க 
இரவு எங்கே தூங்கும்
..................................
சோம்பி இருப்பவனுக்கு விடிகாலை எதற்கு
சுறுசுறுப்பாய் இருப்பவனுக்கு இரவு எதற்கு
...................................
இரவின் நிறம் கறுப்பெனில்
கண்களை மூடி என்ன பயன்
.......................................
இரவு
இறக்க
விடிய
பிறக்க
இரவில்
இறந்து
விடியப்
பிறக்கிறான்
மனிதன்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... உண்மை... வாழ்த்துக்கள்...