5/15/2015

தானை தலைவன் சிந்தனைகள்

காலாற கடலோரம்
நடை போட வந்தேன்
கடலைகள் கதைகொண்டு 
கரைதேடி வந்தது
நிலையான தீர்வொன்று
எமக்கிங்கு கிடைக்காதாம்
நிம்மதியாய் ஊர்ப்பக்கம்
தலை காட்ட முடியாதாம்
ஆட்சி மாற்றம் நடந்தாலும்
பேச்சில் மாற்றம் இல்லையாம்
அரிசி விலை குறைந்தாலும்
அடிமை நிலை மாறாதாம்
போட்டி போட்டு பலநாடுகள்
தேடி ஓடி வருகினமாம்
வேட்டி கூட இல்லாமல்
போகும் நிலை உண்டாகுமாம்
உலகத்து நாடுகளில்
ஊறுகாயாம் எங்களினம்
தேவைக்கு தொட்டுவிட்டு 
இல்லையென்றால் விட்டுவிடுமாம்
யாரோ யாரோ சொன்னதுக்கெல்லாம்
தலையை ஆட்டும் அரசியலாம்
தானை தலைவன் சிந்தனைகள்
தலைகீழாய் கிடக்கிறதாம்
வசதி வாய்ப்பு வந்ததுமே
உரிமை எல்லாம் மறந்து போச்சாம்
கட்டி வச்சு அடிச்சாலும்
சோறு போட்டால் சந்தோசமாம்
கரை தொட்டு வந்த அலைகள்
நுரை கக்கி சொன்னதெல்லாம்
வரி கட்டி சொல்லிவிட்டேன்
உண்மை பொய் யார் அறிவார்

No comments: