1/18/2009

அது ஒரு காலம்

...................................

குட்டிக்கொட்டிலுக்குள்
எட்டிப்பார்த்த
குயிலின் கீதம்

சாக்குக்கட்டிலுக்குள்
சரணாகதியடைந்த
சடலம்போன்ற ஒரு உருவம்

தோல்கள் சுருங்கி
கண்கள் இருண்டு
சேலைத்தலைப்பை
பானைதூக்க பாவிக்கும்
வரண்டபார்வையுடன்
வயதான ஒன்று

செம்பட்டையடித்த
நீட்டுக்கூந்தலுடன்
நானும் அழகுஎன்ற
நம்பிக்கையுடன் ஒரு பெண்

சீருடைஅணிந்த
திருஉருவப்படம்
ஒருபக்கத்தூணில்

பாடவந்த குயில்கூட
சோகமாய் அழுதது
பாவம் இந்த மனிதர்களென்று

மழைவருமா இல்லையாஎன
வீட்டுக்குள் இருந்தே
வாணம்பார்க்கும் அளவிற்கு
கூரைதளர்ந்த கொட்டிலது

ஓரமாய் குயில் உள்ளேசென்று
சாக்குப்பைக்குள்
சல்லடை போட்டது

பட்டுச்சட்டையுடன்
பளபளக்கும் நகைபூட்டி
குட்டிச்சிறுமி ஒன்று

கூட்டுக்குயிலை
திறந்துவிடும் படம்

ஓட்டிலேறி அன்ரனா திருத்தும்
சின்னப்பையனின் படம்

பட்டு மெத்தையில் பளபளக்கும்
உடுப்புடன் அம்மாவின் படம்

முறுக்குமீசையுடன் மோட்டார் வண்டியில்
அப்பாவின் படம்

பார்த்தவுடன் விளங்கிவிடும்
இவர்கள்தான் அவர்களென்று
அது ஒரு காலம்

..........................................

No comments: