9/07/2015

யாயும் ஞாயும் யாராகியரோ

வழி அனுப்பிவிட்டு 
வாசலில் விழிகரைந்து 
நிற்பதும் 

வாசல் வரும்முன்னே 
ஆயிரம் முத்தங்கள் 
தருவதும் 

உயிர் உள்ளிருந்து 
வெளியில் செல்வதுபோல்
நினைப்பதும் 

அனுப்பி விட்டு 
நினைவு தோட்டத்தில் 
மலர் பறிப்பதும் 

அப்பப்ப சிரிப்பதும் 
அழகான படங்கள் எடுத்து 
பார்ப்பதும் 

அலை பேசியில் 
நொடிக்கொரு முறை 
தகவல்கள் சொல்வதும் 

வீடு திரும்பும் வேளை 
ஓடிவந்து கட்டி 
அணைப்பதும் 

குட்டி பூனைபோல் 
என் கால்களுக்குள்ளே 
நிற்பதும் 

"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"

No comments: