9/16/2015

மாலை சூடும் நேரம்வரைக்கும்

நிமிடம்தோறும் உந்தன்நினைப்பு
நினைத்து நினைத்து எனக்குள்சிரிப்பு
பட்டாம் பூச்சி இதயத்துடிப்பு
பார்க்க துடிக்கும் அன்பின் அணைப்பு

கிட்ட வந்தால் வெட்க்கப்படுவேன்
எட்ட சென்றால் ஏங்கி தவிப்பேன்
மூச்சு முட்ட காதல் கொள்வேன்
சொல்ல முடியாமல் குழம்பி நிப்பேன்

கண்ணை பார்க்காதே நாணம் கொள்வேன்
கண்ணால் பார்க்காதேஉருகி வடிவேன்
கட்டி பிடிக்காதே தேகம் குழைவேன்
கரைகள் படியாமல் காத்து கிடப்பேன்

மாலை சூடும் நேரம்வரைக்கும்
மணவறைக்கோளம் காணும்வரைக்கும்
விடுமுறை இல்லா வெட்கம் கொள்வேன்
விரும்பியே உன்னை தள்ளிவைப்பேன்

No comments: