9/29/2009

இறப்பதற்கு யாருமே இல்லை


நான் இறந்தால்


தூக்குவதற்கு

நாலுபேர் இல்லை

நான் இறந்தால்

கவலைப்பட

மூன்றுபேர் இல்லை

நான் இறந்தால்

அழுவதற்கு


இரண்டுபேர் இல்லை

நான் இறந்தால்

கொள்ளிவைக்க

ஒருமகன் இல்லை

நான் இறந்தபின்

இறப்பதற்கு குடும்பத்தில்

யாருமே இல்லை

9 comments:

Admin said...

பலரின் ஏக்கம் உங்கள் கவி வரியாக...
நல்ல வரிகள்...

நிலாமதி said...

தனிமையும் விரக்தியின் வலியும் தெரிகிறது ....நமது முகாம் களில் வாடும் மக்களின் ஒலமாக் இருக்கிறது. எனக்கென்று யாரு இருக்கிறார்கள் ?

ப்ரியமுடன் வசந்த் said...

ayyo..

yaazhavan...

pls stop....

we are .... solla mudiyala....

ஈரோடு கதிர் said...

அய்யோ

ஈரோடு கதிர் said...

//நிலாமதி said...
எனக்கென்று யாரு இருக்கிறார்கள் ?//

என்ன சமாதானம் சொல்ல முடியும். மன்னியுங்கள்

கவிக்கிழவன் said...

சந்ரு நிலாமதிபிரியமுடன்...வசந்த் கதிர் - ஈரோடு நன்றி நண்பர்களே
எமது நிலை
இவற்றை நாம் ஆவணபடுத்தது விட்டால் நாளைய தலைமுறைக்கு தெரியாமலே போய் விடும்

இறக்குவானை நிர்ஷன் said...

தனிமையின் வலிகளை வரிகளாக்கியிருக்கிறீங்க.
நல்லாயிருக்கு.

எழுத்து தொடரட்டும்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

மறக்கவோ ,மறைக்கவோ முடியாத யதார்த்தம் யாதவன். இது என்ன சாபக் கேடு?

அன்புடன் மலிக்கா said...

கவிபடித்து முடிக்கும்முன்
கண்களில் நீர்
ஏனென்றுத்தெரியவில்லை
இதயமும் அடைக்கிறது..