11/27/2011

பிணமாய் வீழ்ந்தோம் மண்ணை காக்க



இதயம் விதைத்தோம் ஈழம் பிறக்க
கனவை வளர்த்தோம் காலம் முழுக்க
புயலாய் எழுந்தோம் புருவம் உயர்த்த
புழுதியில் விழுந்தோம் துரோகம் ஜெகிக்க

மூச்சை இழந்தோம் முதுகில் குத்த
பேச்சை இழந்தோம் சிறையில் அடைக்க
சாக துடித்தோம் மண்ணை அணைக்க
சாபம் பெற்றோம் தமிழ் மண்ணை இழக்க

வேள்வி செய்த்தோம் வெற்றி எடுக்க
வெட்ட வீழ்ந்தோம் காட்டி கொடுக்க
நம்பி இருந்தோம் உதவி கிடைக்க
நாயாய்  அலைந்தோம் அவர் கையை விரிக்க

இனமாய் அழிந்தோம் மானம் காக்க
பிணமாய் வீழ்ந்தோம் மண்ணை மீட்க
நினைவாய் சுமக்கிறோம் ஈழம் வெல்ல
எழுந்து நிப்போம் வெற்றி பிறக்க

15 comments:

SURYAJEEVA said...

இன்குலாப் ஜிந்தாபாத்

Rathnavel Natarajan said...

வேதனையான கவிதை.

ஹேமா said...

ஒருமித்த குரலோடு ஒன்று சேர்வோம்.நல்லதே நடக்க அவர் வழி தொடர்வோம்.மரணித்த அத்தனை உயிர்களுக்கும் வீரவணக்கங்கள் !

ரிஷபன் said...

எழுந்து நிப்போம் வெற்றி பிறக்க

அப்படியே ஆகட்டும்!

Yaathoramani.blogspot.com said...

அருமையான தன்னம்பிக்கைப் பதிவு
இறுதி வரிகள் நெஞ்சைநிமிரச் செய்து போகிறது
தொடர வாழ்த்துக்கள் த.ம 4

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமையா சொன்னீங்க.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

சுதா SJ said...

ஒருமித்த குரலில் ஒன்று சேர்வோம் அவர்களை வாழ்த்தவாவது....

சுதா SJ said...

மனசு கனக்கும் கவிதை நண்பா..

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை அருமை நன்றி நண்பரே!

கோகுல் said...

எழுந்து நிற்போம்.

Anonymous said...

தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்...இவ்வினத்தின் கவலைகள் அனைத்தும் தீரும்...

விடுதலைக்கு உயிர் தந்த அனைத்து மாவீரர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வீர வணக்கம் ...

துரைடேனியல் said...

Arumai Sago.
TM 9.

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ் ஈழம் மலra வாழ்த்துகள்

நிரூபன் said...

வணக்கம் பொஸ்,

காலத்தின் கவிதையாக இக் கவியைப் படைத்திருக்கிறீங்க.

இன்னல்களின் மத்தியிலும் இலட்சிய உறுதி குன்றாது நாம் எமக்கான தேசத்தினை உருவாக்க வேண்டும் என்பதனை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகிறது இக் கவிதை.

ம.தி.சுதா said...

இன்று கனவு கூட தொலைத்தோமே சகோதரா...