9/20/2010

காத்திருக்கிறேன் அன்புத்தோழி


பொத்தி வைத்த காதல் மொட்டு
முட்டி மோதி பூக்குதிங்கு
வெட்கத்துடன் நாணம் சேர்த்து
வெட்டும் வாளாய் குத்துது இங்கு


சொந்தக்ககனவுகள் சேர்த்துவைத்து
சொல்லவளியின்றி காத்திருந்து
சொந்தமானதும் சொல்லப்போறேன்
ஜோடி சேர்ந்து வாழப்போறேன்


தொட்ட இடத்தில் முத்தமிட்டு
தொடாத இடத்தில் கன்னமிட்டு
மொட்டு வைத்த காதல் மழையாய்
சொட்டு சொட்டாய் தூரப்போறேன்


சொந்த மன்னவன் எந்தன் மடியில்
சொர்கவைக்கும் உதடுசிரிப்பில்
சொல்லவந்ததை சொல்லிவிடுவான்
சொல்லாமலே அள்ளிவிடுவான்

14 comments:

வினோ said...

அருமையா அமைந்திருக்கு யாதவன்..

Lakshman said...

அய்யோ, அண்ணா தாங்க முடியவில்லை. கவிதையாலே கொல்லுறேங்கள். what a beautiful imagination. very nice words....

Unknown said...

ஒரு திரைபாடலுக்கான கவிதை ...

http://rkguru.blogspot.com/ said...

கவிதை அருமையா இருக்கு வாழ்த்துகள்....

சிந்தையின் சிதறல்கள் said...

அருமையான கவிதை நண்பா

அன்பென்று கொட்டு முரசே said...

I agree with senthil kumar. very nice poem.

கவி அழகன் said...

நன்றி நண்பர்களே

முனியாண்டி பெ. said...

I too agree with KRB. It's too good

Unknown said...

திரைப்பாடலின் பாதிப்பின் வெளிப்பாடு..அருமை

Jeyamaran said...

kalakuringa vaalthugal................
net slow tamila marala athan.....

ம.தி.சுதா said...

ஃஃஃ...தொட்ட இடத்தில் முத்தமிட்டு
தொடாத இடத்தில் கன்னமிட்டு...ஃஃஃ மிகவும் ஆழமான வரிகள் ... அருமை..

நிலாமதி said...

விசேடங்கள் விரைவில் நடக்க வாழ்த்துக்கள்.

Ernest Arulcheyan said...

God has given you a good talent, use it for his glory.The one who paid the penalty of mine and your's sin.
I could see that you can become a kuddy Kanathasan.

Lord Jesus Bless you.
Arulcheyan.

கவி அழகன் said...

Thnk you very much ernest