நிழலோடு நீ நடக்க
உன்னோடு நான் நடக்க
மனதோடு ஒரு வார்த்தை
மறக்காமல் சொல்வாயா
இடையோடு உடை ஆட
உடையாமல் நான் பார்க்க
நெளியாமல் ஒரு முத்தம்
அலுக்காமல் தருவாயா
விரலோடு விரல் கோர்த்து
விழியோடு விழி சேர்த்து
புரியாத புதிருக்கு
பதில் ஒன்று சொல்வாயா
இரவோடு இருள் சேர
கனவோடு நான் சேர
நிஜமாக ஒரு காதல்
உயிராக தருவாயா
Tweet | |||||
No comments:
Post a Comment