5/02/2012

கனவொடிந்த கூட்டினுள்ளே காதல் தினம்

கிளி இருந்தால்

கிளை ஓடியும் பட்டமரம்

நினைவுகளுடன்

சேர்ந்து வாழும் பெண்ணின் மனம்


கனவொடிந்த

கூட்டினுள்ளே காதல் தினம்

கதறி கதறி அழுகிறதே

இது என்ன வரம்


இணைபிரியா இருப்பது

எங்கள் குணம்

இடையிலே வந்ததென்ன

இந்த சினம்


மனம் இரண்டும் ஒடிந்தது

எந்த கணம்

மறக்க முடியா காதல் – அது

எந்தன் நிறம்


கரம் கோர்த்து நடந்திருப்பேன்

எத்தனை தரம் - நீ

கைவிட்டாலும் காதலிப்பேன்

என் காதல் நிஜம்

9 comments:

ஆத்மா said...

கிளி இருந்தால்

கிளை ஓடியும் பட்டமரம்

புதுசா இருக்கு சகோ...
வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

இணைபிரியா இருப்பது

எங்கள் குணம்

இடையிலே வந்ததென்ன

இந்த சினம்


nice..

சசிகலா said...

எத்தனை தரம் - நீ

கைவிட்டாலும் காதலிப்பேன்

என் காதல் நிஜம்

மிகவும் அருமையான உண்மைக்காதல் கைகூட வாழ்த்துக்கள் .

ம.தி.சுதா said...

காதல் கவிதை நாயகனே வாழி... வாழி...

ஹேமா said...

காதலின் விதி இதுதானோ.ஒடிந்தாலும் வாழும் !

Anonymous said...

nice rhyming words.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ! உண்மைக் காதல் என்றும் வாழும் !

kowsy said...

காதல் இல்லை எனில் சாதல் என்றார் குயில் பாட்டில். இங்கு காதல் ஒடிந்தாலும் காதலிப்பேன் இது நிஜம் என்று நிலைக்கும் காதல் பற்றித் தந்திருக்கின்றீர்கள் . வாழ்க

Swapna 2v said...

hii.. Nice Post

Thanks for sharing

More Entertainment

For latest stills videos visit ..

.