1/19/2011

காதலித்தே காதலித்தே கொல்லப்போகிறேன்


கோவப்பட ரோஜா முகம் சிவந்து போனதோ
கஷ்டப்பட்டு கோவப்பட்டால் உதடு சிரிக்குதோ
முகத்தை திருப்பி முறைத்து பாத்தால் கோவமாகுமோ
முத்தம் ஒன்று தந்துவிட்டால் கோவம் போகுமோ

நித்தம் உன்னை காதலிக்கவே கனவு காண்கிறேன்
நிம்மதியை தரத்தானே சேவை செய்கிறேன்
அன்புகொண்ட நெஞ்சில் கோபம் ஏன் முளைத்தது
ஆரதழுவ வேண்டும் எண்டு மனசு சொல்லுது

உன்னை மட்டும் நினைப்பதற்கே ஜீவன் கேட்கிறேன்
உண்மை உள்ள காதல் நெஞ்சை அள்ளித்தருகிறேன்
அன்பில் வர்ந்த காதலையே சொல்லத் துடிக்கிறேன்
உன்னை காதலித்தே காதலித்தே கொல்லப்போகிறேன்

18 comments:

Sriakila said...

//காதலித்து காதலித்து கொல்லப்போறேன்//

இப்படி டைட்டில் வச்சா யாரு தைரியமா காதலிப்பா? ஓஹோ! 'அன்பு' அது கூட வெறித்தனமாக இருந்தால் கஷ்டம் தான்.

இருந்தாலும் கவிதையாக 'நச்'.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமை கவிதை..

Anonymous said...

where are u?

kowsy said...

இரசித்துச் சிரித்தேன். அருமை.

Unknown said...

இ.பி.கோ.வில் இதற்கெல்லாம் தண்டனை கிடையாது தானே... ஆதலால் தொடரட்டும்...

Unknown said...

அன்பின் சுகம் கவிதையின் அத்தனை வரிகளிலும் ஒளிர்கிறது...

Unknown said...

அருமை...எனக்கும் எழுதோணும் போல இருக்கு..நீங்க தொடருங்கோ!!

Jeyamaran said...

migavum arumai nanbaaaaaaaaa

நிலாமதி said...

ஐயோ அவ பாவம்........சும்மா சொன்னேன். உயிரையும் தருவது காதல்.

ஹேமா said...

இப்பிடியெல்லாம் திட்டம் இருக்கோ...அவங்களுக்கும் தெரியுமோ !

vanathy said...

super kavithai!

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஉன்னை மட்டும் நினைப்பதற்கே ஜீவன் கேக்கிறேன்
உண்மை உள்ள காதல் நெஞ்சை அள்ளித்தருகிறேன்ஃஃஃஃ

அவங்க கொடுத்து வச்சவங்க... அருமை அண்ணா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

அடியாத்தி என்ன தலைப்பு இது... பயங்கரமா இருக்கே..

கவிதை காதலா இருக்கு...

எஸ்.கே said...

அந்த கடைசி லைன் ரொம்ப வித்தியாசம்!

Vijay Periasamy said...

கவிதை கிழவரின் கவிதை வரிகள் , மிகவும் இளமை .
கவி அழகன் --> உங்கள் கவி மிக அழகு !!

Unknown said...

அருமை யாதவன் பாஸ்..
ரொம்பத்தான் பீல்'ல இருக்கீங்க போல!!

சிந்தையின் சிதறல்கள் said...

அருமை அருமை தோழா....
பின்னிட்டிங்க.

jgmlanka said...

தம்பி நீ காதலித்துக் கொல்கிறாயோ இல்லையோ... அழகிய கவிதைகளால் எம்மைக் கொல்கிறாய்... திரும்ப திரும்ப வாசித்து அசந்து போகிறேன். ஒவ்வொரு வரியிலும் காதல் துடிக்கிறதடா... வாழ்த்துக்கள்