
வயலோர வரப்பினிலே
சிலையாக நடந்தவளே
அலையாக காற்று வர
உன் அசைவாலே பாட்டுவர
நான் புயலான மாயமென்ன
புடம்போட்ட தேகமென்ன
ஏர் பிடித்த மாடுகளோ
சீர்படுத்தி நிலம்பிளக்க
தேனான மழைத்துளிகள்
உடல் முழுக்க பரவிவிழ
கோடான விளைச்சலுக்கு
ஏங்கிநிற்க்கும் ஏழை என்ன
சிலையாக நடந்தவளே
அலையாக காற்று வர
உன் அசைவாலே பாட்டுவர
நான் புயலான மாயமென்ன
புடம்போட்ட தேகமென்ன
ஏர் பிடித்த மாடுகளோ
சீர்படுத்தி நிலம்பிளக்க
தேனான மழைத்துளிகள்
உடல் முழுக்க பரவிவிழ
கோடான விளைச்சலுக்கு
ஏங்கிநிற்க்கும் ஏழை என்ன
கந்தாங்கி சேலை கட்டி
கை நிறைய வளையளிட்டு
பெண் தாங்கும் இடையாலே
பந்தாடி செல்கையிலே
உரம் போடா வயலினிலே
நெல் தானாக முளைத்தென்ன
நெல் தானாக முளைத்தென்ன
Tweet | |||||
10 comments:
கவிதை அருமை.
( எப்ப பாத்தாலும் ஊடல் ஊடல் என்றே கவிதை எழுதுறீங்க!!! என்ன பிரச்சினை என்று சொல்லுங்கோ தீர்த்து வைக்க முயற்சி செய்கிறேன். ஹாஹா )
ஊடலின் பின்தானே காதல் வரும் வானதி
எனக்கு காதல் என்றால் ரொம்ப பிடிக்கும்
உங்கள் வருகைக்கும் வாக்குக்கும் நன்றிகள் ஆயிரம்
கவிதை அருமை யாதவன்....
நிதியும் நித்தியும் ஒன்று தான்
http://aagaayamanithan.blogspot.com/2011/01/blog-post_6104.html
கந்தாங்கி சேலை கட்டி
கை நிறைய வளையளிட்டு..... very nice combination anna.
ஊர்விட்டு ஊர் மாறினாலே ஊடல்தான்.ஆனா அன்பு மாறாது கிழவரே !
//உரம் போடா வயலினிலே
நெல் தானாக முளைத்தென்ன//
காதல் முளைத்த விதம் அழகோ அழகு... மிக அழகிய வரிகள்...
சின்ன சந்தேகம்... பெண் தாங்கும் இடை.. என்றால் என்ன அர்த்தம்? அல்லது எழுத்து பிழையா?
தருணத்திற்கேற்ற கவிதை அண்ணா மிக்க நன்றி..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.
மிகவும் அற்புதமான படைப்பு உங்கள் கவிப் பணி தொடர வாழ்த்துக்கள்
'புடம் போட்ட தேகமென்ன....' ஆகா....அர்த்தமுள்ள வரிகள்..
Post a Comment