1/05/2011

கிராமத்து காதல்



கிராமத்து வீதியிலே
வெறுங்காலுடன் நடக்கையிலே
வேலிக்குள் சத்தம் கேட்கும்
எட்டிப்பார்த்தால் வெட்கப்படும்

சீத்தை துணி உடுத்திரிப்பாள்
சிங்காரமாய்த்தான் அவளிருப்பாள்
இரட்டைப் பிடி கட்டினாலும்
ஒற்றை மனதுடன் காத்திருப்பாள்

முற்றம் கூட்டும் சாக்கினிலே
முத்தம் கேட்டு வந்திடுவாள்
கன்னம் சிவக்க முத்தமிட்டாள்
கண்களாலே காதல் தருவாள்

தண்ணி அள்ள போகையிலே
தனியாக கூப்பிடுவாள்
தாகம் தீர்க்க தண்ணி தந்து
காதல் தாகம் தீர்த்திடுவாள்

கோவிலுக்கு போகையிலே
கொலுசு ஒலி பாதையாகும்
அவள் வாழ நான் தொழுவேன்
அவள் கண்களுக்கு கீழ் தவமிருப்பேன்

23 comments:

ம.தி.சுதா said...

ஊருவிட்டு ஊரு வந்து... டாண்டா டாண்டா டணக்க டண்ணடா.. ஹ..ஹ..ஹ..

அண்ணாத்தே எங்கயப்பா தொலைஞ்ச...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பிரபல பாடகரின் பிரபலமில்லாத மறைவு - Bobby Farrel

ம.தி.சுதா said...

101 தொடர்பாளரைப் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...

கவி அழகன் said...

சொந்த மண்ணை விட்டு புலம் பெயர்ந்ததால் வலை பக்கம் வர முடியவில்லை தம்பி சுதா
நன்றி உனது கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும்
--

sathishsangkavi.blogspot.com said...

//முற்றம் கூட்டும் சாக்கினிலே
முத்தம் கேட்டு வந்திடுவாள்
கன்னம் சிவக்க முத்தமிட்டால்
கண்களாலே காதல் தருவாள்//

அனுபவ வரி மாதிரியே இருக்கு... உண்மையா நண்பா...

Sathish said...

//கோவிலுக்கு போகையிலே
கொலுசு ஒலி பாதையாகும்
அவள் வாழ நான் தொழுவேன்
அவள் கண்களுக்கு கீழ் தவமிருப்பேன்//

//முத்தம் கேட்டு வந்திடுவாள்
கன்னம் சிவக்க முத்தமிட்டால்
கண்களாலே காதல் தருவாள்//

என்னுடைய கடந்த கால காதலின் இளவேனிற்காலத்தை நினைவு படுத்துகிறது இந்த வார்த்தைகள்....

சிந்தையின் சிதறல்கள் said...

வாவ் என்று சொல்ல தோண்றும் கவிதை நண்பா

வினோ said...

நல்ல காதல் யாதவன்...

Jeyamaran said...

*/கோவிலுக்கு போகையிலே
கொலுசு ஒலி பாதையாகும்
அவள் வாழ நான் தொழுவேன்
அவள் கண்களுக்கு கீழ் தவமிருப்பேன்/*

asathal nanbaa

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமை...
நீண்ட நாட்களாக உங்ளை காணவில்லை சகோதரா?
புதுவருட வாழத்துக்கள்...

ஹேமா said...

கிழவரே...சுகமா...நீங்களும் புலம்பெயர்ந்தாச்சா....சரிதான்.கவிதை அழகான படத்தோட நல்லாயிருக்கு யாதவன் !

Anonymous said...

அடடா அம்புட்டு தாக்கிடுச்சா அப்பச்சரிங்க..

Ramesh said...

அடடா யாதவ் அவுஸிலும் ஒரு கிராமம் கிடைத்தா?? கவிதைப்பொண்ணு சுப்பர்ஃ இந்த போட்டோ நல்லா இருக்கு

அன்பரசன் said...

சூப்பருங்கோ..

jgmlanka said...

புலம் பெயர்ந்தாலும் எழுத்தில் மண் வாசனை வீசுகிறது. தொடர வாழ்த்துக்கள்.

கவி அழகன் said...

நன்றி சங்கவி Sathishkumarநேசமுடன் ஹாசிம் sவினோJeyamaran தோழி பிரஷா ஹேமாதமிழரசி றமேஸ்-Ramesh அன்பரசன் பூங்கோதை நண்பர்களே
சொந்த மண்ணை விட்டு புலம் பெயர்ந்ததால் வலை பக்கம் வர முடியவில்லை

உங்கள் கருத்துக்களுக்கும் வாக்குகளுக்கும்
ரமேஷ் இந்த படம் மட்டக்களப்பில் தான் எடுத்தது

நிலாமதி said...

மண்வாசம் வீசும் பதிவு அருமை.

Anonymous said...

supper

your loving sister said...

anna neenka eannai vittu ponathuthan eanaku kavali.meendum eappothu varuveenka.....

ஜெயந்த் கிருஷ்ணா said...

செம செம... ரொம்ப நல்லாயிருக்கு நண்பரே...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும்
http://pirashathas.blogspot.com/2011/01/blog-post_07.html

Unknown said...

எங்க யாதவன் புலம் பெயர்ந்துவிட்டீர்கள்??அது தானா அதிக காலம் மிஸ்ஸிங்??

அழகி said...

அருமை

Unknown said...

அற்புதம் அன்பரே