11/09/2010

வசியமில்லா காதலால் ருசிக்கமுடியா இரவுகள்



கடல் புரண்டு தரையானாலும்
மனம் உடைந்து துரும்பானாலும்
பிடிவாத குணம் படைத்தாய்
பிழையானத்தை ஏன் தொடுத்தாய்

உடலிலே ஒன்றுமில்லை
மனசும் உணர்வும் இரண்டும் உண்மை
தடையாக ஏன் நினைத்தாய்
தடுக்காமல் ஏன் துடித்தாய்

பிரிவென்றால் விருப்பமில்லை
சேர்ந்துவாழ முடியவில்லை
எதற்காக் இணைத்துக்கொண்டாய்
இணைந்தபின் ஏன் உதைந்தாய்

கனவாக நினைக்கவில்லை
கனவுகான பிடிக்கவில்லை
தெளிவாக சொல்லுகின்றேன்
உனைவிட்டால் வாழ்வு இல்லை

கருத்துகள் வாக்குகளை தீர்மானிக்கும் ,வாக்குகள் கருத்துகளை தீர்மானிக்கும் சனநாயக பிச்சை .

13 comments:

Ramesh said...

நல்லாருக்குங்க..

Unknown said...

nice

ஹேமா said...

யாதவன்...சில சமயங்களில் பட்ட பின்னால்தான் அறிவு வருகிறது !

Ramesh said...

நல்லா இருக்கு.
தெளிவு.

Lakshman said...

Anna,உறக்கம் கலைவதெப்போ? மயக்கம் தெளிவதேப்போ?

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃகனவாக நினைக்கவில்லை
கனவுகான பிடிக்கவில்லைஃஃஃஃ
அண்ணா அருமை காதலை காதலாகப் பார்க்கிறீர்கள்...

Unknown said...

யாதவன்,பேசாம profile 'ல போட்டிடுங்க காதலி காதலி காதலில் தவிக்கிறேன் எண்டு..ஹிஹி..
கவிதை அருமை நண்பா

Anonymous said...

தெரிந்தபதில்களும் புதிராகிறது காதலில்..கவிதை நல்லாயிருக்கு யாதவன்...

நிலாமதி said...

ஆழமான காதலுக்கு பிரிவு இல்லை

சௌந்தர் said...

கனவாக நினைக்கவில்லை
கனவுகான பிடிக்கவில்லை
தெளிவாக சொல்லுகின்றேன்
உனைவிட்டால் வாழ்வு இல்லை///

அட டா சரி விடாதீங்க....

சிந்தையின் சிதறல்கள் said...

அருமையாக உள்ளது வரிகள் வாழ்த்துகள் நண்பா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமையாக உள்ளது வரிகள்

"கனவாக நினைக்கவில்லை
கனவுகான பிடிக்கவில்லை
தெளிவாக சொல்லுகின்றேன்
உனைவிட்டால் வாழ்வு இல்லை"

suba said...

Iranthuviduvom Ena Therinthum,
Vilakkai ThediSellum Vittil poochipol,
Unnai Patri Therinthum Thinam
Unnaiye Suttri Varukiren!

Nee Ennai Virumbavillai Endru Therinthum,
Unnaiye Virumbugirathu Enithayam!