8/09/2010

காதலால் உருகி கண்ணீர் மல்கி



விழிகளின் கதிர்களில் ஏக்கம்

விரும்பியே துடிக்குது இதயம்

உதடுகள் உரசிடும் பருவம் - மனம்

காதலால் குளைந்த அருவம்


பார்கமுன் முடிக்கவா வெட்கத்தை

முடித்தபின் பார்கவா மிச்சத்தை

நினைக்கமுன் ஏங்குது கனவுகள்

நினைக்கவே மயக்குது வனப்புகள்


தடுப்பது மனம்தான் மறந்துவிடு

தற்பொழுது காதலை பெற்றுவிடு

கண்ணை மூடினால் உலகம் இருட்டு

காதலில் விழுந்தபின் கண்கள் குருடு

6 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

Nice Bro...

Mohamed Faaique said...

நல்லாயிருக்கு...
இன்ட்லி வாக்குப்பட்டையை தமிழில் இடவும். வாக்களிக்க வசதியாக இருக்கும்.

Anonymous said...

maayakka nelaiyil oru maayak kavithai....

Anonymous said...

supper kavithai

குமரன் said...

நல்ல கவிதை உருக உருக எழுதியிருக்கு

Kousalya Raj said...

nice one...