9/13/2009

தேவதையே எனது வேண்டுதல்
















மழை வேண்டாம்

அகதி முகாம் வெள்ளத்தில்

மூழ்க வேண்டாம்


வெய்யில் வேண்டாம்

பச்சைக் குழந்தைகள் அகதி முகாமில்

சிறுவீட்டுக்குள் காயவேண்டாம்


காற்றுவேண்டாம்

அகதி முகாமில்

தொற்றுநோய்பரவி சாகவேண்டாம்


உணவு வேண்டாம்

விருந்தோம்பும் தமிழன்

கையேந்தி நிற்கவேண்டாம்


கனவு வேண்டாம்

கனவு முழுக்க இறந்த உறவுகளின்

நினைவுவேண்டாம்



கடவுள் வேண்டாம்

பெற்றோரை இளந்து

ஆனாதைகளான பிள்ளைகள் வேண்டாம்


தண்ணீர்வேண்டாம்

குடிக்கும்தண்ணீர் எல்லாம்

தமிழனின் கண்ணீராக வேண்டாம்


கத்திவேண்டாம்

சிசுக்களை கருவிலேயே

கொல்ல வேண்டாம்


பாக்கிஸ்தான் இந்தியா சீனா வேண்டாம்

தமிழரை அளிக்க

ஆயுதம் அனுப்பவேண்டாம்


சர்வதேசம் வேண்டாம்

சதிதீட்டி தமிழரை

கொல்ல வேண்டாம்
















தேவதையே நான் கேட்பது என்ன என்பது

உனக்கு புரியவேணும்

நான் தேவதையை அனுப்புகிறேன் இவர்களுக்கு


சுமஜ்லா

சக்தி


தியாவின் பேனா


அகல் விளக்கு


தமிழரசி

14 comments:

Anonymous said...

வேட்கை வேண்டாம் வேள்விகள் வேண்டாம் வேதனைகள் வேண்டாம் வெடிகுண்டு கலாச்சாரம் வேண்டாம் விடுதலை வேண்டாம் விட்டு பிரியும் விரகங்களும் வேண்டாம் வெட்டியாகப் போகும் இந்த உயிர் வேண்டாவே வேண்டாம்.....

ப்ரியமுடன் வசந்த் said...

அனைத்து வரங்களும் கிடைக்க பெறுவதாக....

ப்ரியமுடன் வசந்த் said...

அத்தனையும் மனசை உருக வைத்தன....

thiyaa said...

நாதியற்று இருக்கும் மக்களுக்காய் நாமும் பிரார்த்திப்போம்

//
கடவுள் வேண்டாம்

பெற்றோரை இளந்து

ஆனாதைகளான பிள்ளைகள் வேண்டாம்


தண்ணீர்வேண்டாம்

குடிக்கும்தண்ணீர் எல்லாம்

தமிழனின் கண்ணீராக வேண்டாம்
//


உண்மைதான் நமக்கு யார்தான் உதவப் போகிறார்கள் என்ற வெறுப்புடன் உள்ள முகாம் வாழ் மக்களின் ஆதங்கத்தை நன்றாக பிரதிபலித்துள்ளீர்கள்

கவிக்கிழவன் said...

தமிழரசி,பிரியமுடன்,பிரியமுடன்...வசந்த் ,தியாவின் பேனா
நன்றி அன்பு தோழர்களே

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

வரம் முழுக்கத் தமிழனுக்காய்த் தந்து விட்டாய். மெய் சிலிர்க்க வைத்து விட்டாய்.
தேவதை அறியும் உன் நல மனம்.

Arun said...

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் !

விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

Admin said...

அத்தனை வரங்களும் மனதை ஒரு கணம் ஏதோ செய்து விட்டன

வரங்கள் கவிதையாய் நம் உறவுகளின் வேதனையத் தாங்கி.....

அருமை...

ஹேமா said...

யாதவன் அத்தனையும் உணர்வோடு மனசைப் பிழியும் எண்ணங்கள்.தேவதைக்கு எட்டுமா எங்கள் ஓலம் !

கொள்ளவேண்டாம் - கொல்லவேண்டாம்.

கவி அழகன் said...

சந்ரு ஹேமா நன்றி அன்பு தோழர்களே உங்கள் கருத்துக்கு

பிழைகளை திருத்துகின்றேன்

சந்தான சங்கர் said...

வேண்டாம் என்ற இந்த
வேண்டுதலே
வேண்டாம் என்ற நிலை
வேண்டும் என்று
வேண்டுகிறேன்...

ஈரோடு கதிர் said...

மனது எரியும் இடுகை நண்பா

அன்புடன் மலிக்கா said...

வேதனை சுமந்துநிற்கும் தாங்களின் வேண்டுதல்கள் அத்தனையும் பலிக்கட்டும்

நிலாமதி said...

உள்ளத்தை தொட்ட கவிதை . பதிவுக்கு பாராடுக்கள்.