8/14/2012

அன்புள்ள காதலுடன் காலை விடிகிறது

காலையில் உன்னை

கைபிடித்து எழுப்பி

சோம்பல் முறிக்கையில்

கட்டி அனணத்து

குளியலறை போக

சண்டை பிடித்து

குளித்து முடித்து

சாமி கும்பிட்டு

உன் நெத்தியில் நானும்

என் நெத்தியில் நீயும்

திருநீறு பூசிவிட

நீ கண்களை மூட நான் ஊத

நான் கண்களை மூட நீ ஊத

அப்படியே நான்கு கண்களும்

நடனமாடி பின்னி பிணைய

நேரம் போவதை எண்ணி

சுதாரித்து முழித்து

அவசரமாய் அடுப்படி சென்று

நீ ஆத்திவரும் தேநீருக்காய்

தொலோக்காட்சி முன் தவமிருந்து

உன்கையில் தேநீர் வாங்கி

உனக்கே பருக்கி விட

அப்படியே அதை நீ

எனக்கு பருக்கி விட

எனது காலை விடிகிறது

அன்புள்ள காதலுடன்

11 comments:

குறையொன்றுமில்லை. said...

நல்ல ரசனையான கவிதை.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆஹா... ரொம்ப தான் ஆசை... ஹா.. ஹா...

நல்ல சிந்தனை...

வாழ்த்துக்கள்... நன்றி…

ஹேமா said...

ஒரு காதல் காலை எவ்வளவு அழகாய் இருக்கிறது.காதலிக்காதவர்களையும் தூண்டிவிடுறமாதிரி இருக்கு யாதவன் !

mycollections said...

காதலும் அழகு!
அழகிய காதலால் காலையும் அழகு !

ஒவ்வொரு காலையும் காதலுடன் விடியட்டும்............

MARI The Great said...

அழகான விடியல்!

MANO நாஞ்சில் மனோ said...

புதுமண தம்பதிகளின் காலை காதல் விடியல் அருமையான கவிதைதான் ஓய்...!!!

Anonymous said...

அன்புள்ள காதலுடன் விடியும் காலை நன்று கவி அழகன்.
பணி தொடரட்டும். நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

மாலதி said...

காதலை சிறப்பாக பதிவு செய்து உள்ளீர் முரண்படாமல் ம்னகளுடன் தொடங்கும் உண்டா வாழ்வு ஊடலும் கூடலும் தான் சிறப்பான இன்பத்தை தருகிறது பாராட்டுகள்

கோமதி அரசு said...

எனது காலை விடிகிறது

அன்புள்ள காதலுடன்//

அழகான கவிதை.
வாழ்த்துக்கள்.

Athisaya said...

ஐஐஐஐஐஐ!!!ஆஹா!!!!!!!!!நல்லாருக்கே.அருமை நண்பா..!
இன்னும் சொல்லுவேன் சத்தமாய்! ..!!!!

தனிமரம் said...

காதலுடன் காலை விடியல் அருமை கவிதை!பின்னுகின்றீங்க காதல் ரசனையில்!ம்ம்