12/18/2011

தூரத்து நிலவு


நிலவை விரைவில்
மறைய கேட்கிறான்
உன்னை அருகில் பார்க்கும்
நாளை எண்ணி
************
நிலவை துடிக்கவைக்கிறேன்- என்
உயிரை கொடுத்து
கனவிலும் நான்
காதலிப்பதற்கு
************
தூரத்து நிலவின்
பாசத்துக்கு ஏங்குகிறேன்
அருகிலிருக்கும் நட்சத்திரங்கள்
எனக்கு நெருப்பு கொள்ளிகளே
****************
நிலவைத்தொடும் விரலை
முந்தி நிற்க்கும் நிகங்கள்
கனவில் வந்து கிழிக்கும்
காதலின் கத்திகள்

17 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆஹா! அருமை!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
என் வலையில்:
"நீங்க மரமாக போறீங்க..."

MANO நாஞ்சில் மனோ said...

கனவில் வந்து கிழிக்கும்
காதலின் கத்திகள்//

கலக்கலான வரிகள், வாழ்த்துக்கள்...!!!

இராஜராஜேஸ்வரி said...

தூரத்து நிலவின்
பாசத்துக்கு ஏங்குகிறேன்
அருகிலிருக்கும் நட்சத்திரங்கள்
எனக்கு நெருப்பு கொள்ளிகளே

nice..

Yaathoramani.blogspot.com said...

முந்தி நிற்க்கும் நிகங்கள்
கனவில் வந்து கிழிக்கும்
காதலின் கத்திகள் //

வித்தியாசமான அருமையான கற்பனை
அழகான கவிதை
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1

ஹேமா said...

கடைசிப் பந்தியில் அத்தனை வேதனையும் அடக்கம் !

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை

சுதா SJ said...

நிலவைத்தொடும் விரலை
முந்தி நிற்க்கும் நிகங்கள்
கனவில் வந்து கிழிக்கும்
காதலின் கத்திகள்<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

என்ன வரிகள்??? பிரமாதம் பாஸ்... சோகம் கூட காதல் கவிதைகளில் தான் அழகு :)

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
நலமா?
நீண்ட நாளைக்குப் பின்னர் சந்திக்கிறேன்!
கொஞ்சம் பிசி!.
தூரத்து நிலவு: தனிமையில் பாசத்திற்காய் ஏங்கும் இவ் உலகின் ஓரத்தில் உள்ள உயிர் ஒன்றின் உணர்வின் வரிகள்.

kowsy said...

அழகான கவிதை தொடர வாழ்த்துகள்

Harini Resh said...

//தூரத்து நிலவின்
பாசத்துக்கு ஏங்குகிறேன்
அருகிலிருக்கும் நட்சத்திரங்கள்
எனக்கு நெருப்பு கொள்ளிகளே//
nice :)

மாலதி said...

நிலவைத்த்டும் விதம் சிறப்பு மிகவும் கலைத்து போனீரோ பாராட்டுகள் தொடர்க ...

சென்னை பித்தன் said...

நன்று.

இராஜராஜேஸ்வரி said...

பூரண் நிலவாய் கவிதைக்கு பாராட்டுக்கள்..

Anonymous said...

''...நிலவைத்தொடும் விரலை
முந்தி நிற்க்கும் நிகங்கள்
கனவில் வந்து கிழிக்கும்
காதலின் கத்திகள்..''
ஓகோ! கவிஅழகன்! இது ரெம்ப வன்முறையாக இருக்கே.....நல்ல கற்கனை வரிகள் வாழ்த்துகள் சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.

ம.தி.சுதா said...

///தூரத்து நிலவின்
பாசத்துக்கு ஏங்குகிறேன்////

என்றும் தங்கள் கண்ணில் விழுந்தபடிதானே இருக்கும்..

அருமை வரியுங்கோ...

சிவகுமாரன் said...

\\நிலவைத்தொடும் விரலை
முந்தி நிற்க்கும் நிகங்கள்
கனவில் வந்து கிழிக்கும்
காதலின் கத்திகள்//

அருமை
Post Comment

Selmadmoi gir said...

நன்றி