3/12/2012

அனாதையாய் அடிபட்டு


தன் உயிர்
தான் நேசித்த உயிர்கள்
உறவுகள் சொந்தம் பந்தம் நட்பு
ஒன்றன் பின் ஒன்றாக
மடியும் போது
கண்ணீர் வற்றிய கதறல்கள்
அனுபவிதவனால் கூட
அதே உணர்வுடன்
திருப்பி சொல்ல முடியாது

பிறந்த பூமி
வாழ்ந்த வீடு
தோட்டம் துறவு வயல் இன்றி
அனாதையாய் அட்டிபட்டு
உணவுக்காய் கை ஏந்தி
உயிர் காக்க
உடைகள் உரிந்து காட்டி
உயிர் தப்பினவன்
இன்னொரு பிறப்பு கேட்க மாட்டான்

7 comments:

SURYAJEEVA said...

சரியான சவுக்கடி..

வலையுகம் said...

வலிமிகுந்த கவிதை

//கண்ணீர் வற்றிய கதறல்கள்
அனுபவிதவனால் கூட
அதே உணர்வுடன்
திருப்பி சொல்ல முடியாது//

கண்டிப்பாக திருப்பி சொல்ல முடியாது

முற்றுகை இடப்படும் போது தான் சுதந்திரத்தின் அருமை புரியும்

பகிர்வுக்கு நன்றி

தமிழ்வாசி பிரகாஷ் said...

உயிர் காக்க
உடைகள் உரிந்து காட்டி
உயிர் தப்பினவன்
இன்னொரு பிறப்பு கேட்க மாட்டான்////

உண்மை... இன்னொரு முறை அடிபட விரும்ப மாட்டான்.

ஹேமா said...

ஆழ உணர்ந்து அனுபவித்து வந்த வலி வரிகளில் தெரியுது !

archu said...

Anna nan ippadi adipattal thirumpi piraka aasai Paducah .becoz saathika poraduvathuku..... Hi Anna your archu again........

மாலதி said...

மனிதப் பிறவி என்பது உயர்ந்தது இதில் இந்த பிறவியில் பாமரனாக ஏழையாக இருந்தால் அடுத்த பிறவியில் நான் பணக்காரனாக இருப்பான் என கடவுள் பற்றாளர்கள் கூறிக் கொள்வதுண்டு அனால் அடுத்த பிறவியை என்னமட்டன் என கூஉவது உண்மையில் நாங்கள் பட்ட வலி அவ்வளவு கொடுமையானது என கூறியமை உள்ளம் கவலை கொள்ளுகிறது தமிழர்களாக இறந்து விட்டதைத் தவிர நாங்கள் என்னசெய்தோம் என இல்லாத கடவுளையும் மனிதபி மனம் உள்ளவர்களையும் கேட்க தொன்றுகியது விடியும் ... காத்திருப்போம் தமிழரே உயர்ந்தவர் ஒற்றுமையுடன் இனியேனும் இருக்க பழகுவோம் ....

Anonymous said...

உண்மை தான்...கவிஅழகன்.
வேதா. இலங்காதிலகம்.