3/03/2012

அண்ணா மட்டும் இருந்திருந்தால்


வேலியும் இல்லை
கூரையும் இல்லை
நரிகளிடம் இருந்தது தப்ப
நாய் வளர்க்கும் நிலைமை
நாய்க்கு வைக்க கூட
மிச்ச சோறு இல்லை
ஏன் மனுசருக்கே ஒருவேளைதான்
அதுவும் வேலை கிடைத்தால் மட்டும்
ஆனாலும் நாய் நன்றி உள்ள நாய்

கூரை வழியே வெளிச்சம் தெரியும்
வேலி இல்லாததால் வீடே தெரியும்
போர்க்கும் போர்வைதான்
அந்தரங்கச்சுவர்
உயிரை கையில் பிடித்துக்கொண்டு
உறங்கும்நிலை .
வேறை என்னத்தை பிடிக்க .
அதுமட்டும்தானே மிச்சம் இருக்கு

எச்சத்திலும் ஏதோ ஒன்றை தேடி
அலையும் நரிகள்
கேவலம் கெட்டவனுக்கு
கிடைப்பதெல்லாம் அமிர்தம்தானே
ஆம்பிளை என்ற பெயருக்கு
அப்பா இருப்பதால்
மூத்த அக்கா இரண்டுபேரும்
ஓரளவுக்கு தூங்குகின்றார்கள்
அண்ணா மட்டும் இருந்திருந்தால்
நானும் தூங்கியிருப்பேன்
இப்படிக்கு சின்னதம்பி

11 comments:

Yaathoramani.blogspot.com said...

வித்தியாசமாக யோசித்து
இயல்பான வார்த்தைகளில் மிக நேர்த்தியாக
தொடுக்கப் பட்ட மலர் சரம் அருமை
தொடர வாழ்த்துக்கள்

அம்பலத்தார் said...

வலிதரும் வாழ்வின் யதார்த்தமதை உணர்ச்சிமிக்க வார்த்தைகளில் தந்திருக்கிறீர்கள்.

Anonymous said...

யாதார்த்தம் ஒவ்வோரு எழுததிலும். ஈழத்தமிழன் ஈனததமிழனாக வாழும நிதர்சனம் வரிகளில். ஆழப் பாதித்துவிட்டது மனதை. எங்கள்அண்ணன் இருந்திருந்தால்.......

ஹேமா said...

மனதில் உள்ளதை அப்படியே சொன்னமாதிரி இருக்கு.அவலம் எப்போதீரும் என்கிற ஆதங்கத்தோடுதான் எல்லோரும் !

Chittoor Murugesan said...

//அண்ணா மட்டும் இருந்திருந்தால்
நானும் தூங்கியிருப்பேன்
இப்படிக்கு சின்னதம்பி//

நல்லா இருக்கு. கீப் இட் அப் !

மதுரை சரவணன் said...

nice...vaalththukkal

நிலாமதி said...

so nice ....to read

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை சார் !

மாலதி said...

உள்ளத்தை கனக்கச் செய்யும் பதிவு இன்றய சூழலை படம் பிடித்து கட்டுகிறீர் விடிவு ஒருநாள் கிட்டாமலா போகும்?

SURYAJEEVA said...

இதே போன்ற படைப்புகளை தங்களிடம் என்றும் எதிர்பார்க்கிறேன்..

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
வாழ்த்துகள்.