2/26/2012

மானத்தையும் வெக்கத்தையும் விட்டு

இழந்தவை
திருப்பி பெறமுடியாதவை
மறந்திடவும் முடியாதவை

ஒரு கட்டம் வரை
அழமுடியும்
ஆழமாக உணர்ந்து
அழமுடியாது

மனிதனாக
வாழ முடியவில்லை
மனிதனாக
வாழ நினைத்தால்
மிருகத்தைவிட
கேவலமான முடிவு

தண்ணீரை
மறித்துகட்ட முடியும்
உணர்ச்சிகளை
கட்டாயம்
கட்டுப்படுத்த வேண்டி உள்ளது

ஒரு நூல்
இடைவெளியில்
உயிர் எடை குறைய
வாய்ப்புகள் பல

காலடித்தடம் தெரியாமல்
வாழ வேண்டும்
மானத்தையும்
வெட்கத்தையும் விட்டு

10 comments:

கோகுல் said...

ஒரு கட்டம் வரை
அழமுடியும்
ஆழமாக உணர்ந்து
அழமுடியாது

மனிதனாக
வாழ முடியவில்லை
மனிதனாக
வாழ நினைத்தால்
மிருகத்தைவிட
கேவலமான முடிவு//

இந்த வரிகள்
தைத்து செல்கின்றன.

Anonymous said...

உங்கள் பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமென விரும்பினால் என் தளத்தில் இணைக்கலாம். மேலதிக தகவல்களுக்கு http://www.googlesri.com/2012/02/are-you-want-to-writer.html

இராஜராஜேஸ்வரி said...

தண்ணீரை
மறித்துகட்ட முடியும்
உணர்ச்சிகளை
கட்டாயம்
கட்டுப்படுத்த வேண்டி உள்ளது


nice

Yaathoramani.blogspot.com said...

காலடித்தடம் தெரியாமல்
வாழ வேண்டும்
மானத்தையும்
வெட்கத்தையும் விட்டு //

சுருக்கமான வார்த்தைதான்
யோசிக்க யோசிக்க அதன் பொருள்
விரிந்து கொண்டே போகிறது மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்க

சசிகலா said...

காலடித்தடம் தெரியாமல்
வாழ வேண்டும்
மானத்தையும்
வெட்கத்தையும் விட்டு
உண்மை சொல்லும் வரிகள் .

ஹேமா said...

அநேகமான ஈழத்தவரின் நிலையைச் சொல்லியிருக்கிறீர்கள் யாதவன்.மனம் அழுகிறது !

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
வாழ்த்துகள்.

தனிமரம் said...

அழுது புலம்பும் இன்மாகிவிட்ட நிலையை சொல்லிய கவிதை.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கவிதை ! வாழ்த்துக்கள் !

Anonymous said...

ஆழமான கவிதை. கவலை என்று தீருமோ?. பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்