2/04/2012

உடலுக்குள் அசுத்தமா உலகமே அசுத்தமா


மூச்சு காற்று
உடல் பரவி திரும்பும்
அசுத்த காற்று

உடலுக்குள் அசுத்தமா
உலகமே அசுத்தமா

அசுத்த உலகில்
சுத்த காற்றை
மூக்கு துவாரம்
வடிகட்டும்

மனித உடம்பில்
சுத்த காற்று
அசுத்தங்களை
வெளித்தள்ளும்

உடலுக்குள் அசுத்தமா
உலகமே அசுத்தமா

அசுத்த ஆட்சிகள்
சுத்தத்தை அசுத்தமாகி
வெளுத்து கட்டும்

சுத்தங்கள்
சுத்தமாக வாழமுடியாமல்
அசுத்ததுக்குள்
சுத்தம் தேடும்

சுத்தங்களின் சுவையை விட
அசுதங்களின் சுவை அதிகம்
அதிகாரம் கையில் இருந்தால்
அசுத்தங்களெல்லாம் சுத்தம்

சுத்தமான கீழ்தட்டு
அசுத்தமாக வாழ்வதும்
அசுத்தமான மேல்த்தட்டு
சுத்தமாக வாழ்வதும்

மரணித்த மனிதங்களின்
உலகமயமான உலகு
என்பதை உறுதிப்படுத்தும்

11 comments:

வலையுகம் said...

அருமையான கவிதை

சுத்தமான தண்ணீர்
திரும்பும் போது
சிறுநீராக முடைநாற்றத்துடன்

நன்றி சகோ

Yaathoramani.blogspot.com said...

சுத்தமான கீழ்தட்டு
அசுத்தமாக வாழ்வதும்
அசுத்தமான மேல்த்தட்டு
சுத்தமாக வாழ்வதும்
மரணித்த மனிதங்களின்
உலகமயமான உலகு
என்பதை உறுதிப்படுத்தும் //

அருமையான வித்தியாசமான அழகான சிந்தனை
மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான நல்ல கவிதை ! நன்றி !

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துகள்.

இராஜராஜேஸ்வரி said...

மரணித்த மனிதங்களின்
உலகமயமான உலகு
என்பதை உறுதிப்படுத்தும்

அருமையான கருத்து..

sarujan said...

வித்தியாசமான சிந்திக்க தூண்டும் கவிதை

நிரூபன் said...

வணக்கம் நண்பா,

அசுத்தம் எங்கே என அறிந்திட முடியாது தேடல் கொள்ளும் மனதின் உணர்வுகளைச் சொல்லி நிற்கிறது இக் கவிதை.

vetha (kovaikkavi) said...

''..சுத்தமான கீழ்தட்டு
அசுத்தமாக வாழ்வதும்
அசுத்தமான மேல்த்தட்டு
சுத்தமாக வாழ்வதும்

மரணித்த மனிதங்களின்
உலகமயமான உலகு
என்பதை உறுதிப்படுத்து..''
நல்ல வரிகள், வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

திரு.சி.நந்தகோபன்(ஆசிரியர்) said...

நல்ல கவிதை.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ரொம்ப சுத்தம்

தறுதலை said...

ஹிந்தியாவே முடிவு செய்.
தமிழ்நாடு வேண்டுமா? சிங்கள நாடு வேண்டுமா?

-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - மார் '2012)