5/22/2011

நாகரிகமற்ற வாழ்க்கை


வேதனையின் வடுக்கள்
கொடுமையின் ஆட்சி
சின்னபின்னமான உயிர்கள்
சிவந்து நிற்கும் கண்கள்
கேவலம்
எம்மால் முடியவில்லை
பிச்சை ஏந்தும் கைகள்
சாகவும் மனமில்லை
வாழவும் பிடிக்கவில்லை
நப்பாசையில் நகரும்
நாகரிகமற்ற வாழ்க்கை
நாளைய தலைமுறைக்கு
விட்டுச்செல்ல ஒன்றுமில்லை

14 comments:

Anonymous said...

இனவாதமும் யுத்தமும் தந்தவடுக்கள்..


///நாளைய தலைமுறைக்கு
விட்டுச்செல்ல ஒன்றுமில்லை//// வலி மிகு வரிகள் நண்பா

ஹேமா said...

யாதவன்...ஆதங்கம்.இனி எல்லாமே அகதித் தமிழன் கையில்தான்.விட்டுச்செல்ல ஏதுமில்லாவிட்டாலும் விட்டதையாவது எடுக்க வழி செய்வோம் !

குறையொன்றுமில்லை. said...

வேதனையின் ஆழத்தை நல்லா சொல்லி இருக்கீங்க.

ரிஷபன் said...

புது விடியல் வரும் என்று நம்புவோம்

நிரூபன் said...

எங்களின் கடந்த கால ஒப்பீடுகள் ஊடாக நகரும் உங்களின் யதார்த்தம் நிறைந்த கவிதை அருமை சகோ. உண்மையில் நாம் கையாலகாதவர்களா அல்லது கைகள் அற்றவர்களா என்று தான் இதனைப் படிக்கையில் எண்ணத் தோன்றுகிறது தோழா.

Mohamed Faaique said...

எதை கொண்டு வந்தோம் விட்டு செல்ல....
தன்னம்பிக்கை இருக்கு நன்பா.....

kowsy said...

நாளைய தலைமுறைக்கு
விட்டுச்செல்ல ஒன்றுமில்லை

ஏன் ஒன்றுமில்லை. நல்ல பழக்கவழக்கங்கள், சகிப்புத்தன்மை, பொறுமை, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு, ஜீவராசிகள் அனைத்திலும் பாசம், கொல்லாமை, வாய்மை இப்படி எத்தனையோ இருக்கிறது.

jgmlanka said...

சுமந்த தோள்கள் துவண்டு போச்சோ...
சுதந்திரம் எங்கள் கனவாகிப் போச்சோ...
நத்தைகள் போன்ற நம் வாழ்வு - இங்கே
நாகரீக வாழ்வின் விலை என்னவோ???

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வடுக்கள் என்றும் அழியாது யாதவன்.
நாளைய தலைமுறையாவது தலைநிமிர்ந்து வாழனும் வாழும் என நம்பிக்கை கொள்வோம்

vanathy said...

மனதை கனக்கச் செய்யும் கவிதை.

kavikilavi said...

அருமையாக உள்ளது

கவி அழகன் said...

Thanks every body

நிரூபன் said...

பாஸ், ஒவ்வோர் ஞாயிறும் கவிதை போடுவீங்களே, இன்றைய கவிதையைக் காணேல்லையே. எங்கே சகோ.

kovaikkavi said...

சின்னபின்னமான உயிர்கள்
சிவந்து நிற்கும் கண்கள்
வேதனை நிலை தான். வெல்ல இறைவன் சக்தி தரட்டும். Vetha.Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com